பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்க வீட்டிற்கு போகும் ராதிகா, உண்மையை சொல்ல போகும் ராமமூர்த்தி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்க வீட்டிற்கு போகும் ராதிகா, உண்மையை சொல்ல போகும் ராமமூர்த்தி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்க வீட்டிற்கு போகும் ராதிகா, உண்மையை சொல்ல போகும் ராமமூர்த்தி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்க வீட்டிற்கு போகும் ராதிகா, உண்மையை சொல்ல போகும் ராமமூர்த்தி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், தவறே செய்யாமல் பாக்கியா மீது பழி வர ஆனால் ராதிகா கூட அதை நம்பாமல் இருப்பதை நினைத்து பாக்கியா மிகவும் வருத்தப்படுகிறார். இந்நிலையில் ராதிகாவிடம் ஜெனி பாக்கியா பற்றி பேச ராதிகா பேசியது தவறு என நினைத்து வருந்துகிறார். தற்போது ராதிகா பாக்கியா வீட்டிற்கு போக பெரிய திருப்பம் ஒன்று வர இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. பாக்கியா ராதிகா உயிர் தோழிகளாக இருக்க ஆனால் அவர்களுக்கு இடையே பெரிய விரிசல் ஒன்று வந்துள்ளது. ராதிகா பாக்கியாவிடம் சமையல் ஆர்டர் ஒன்றை கொடுக்க அதில் சில பிரச்சனைகள் வருகிறது. அதனால் தவறே செய்யாத பாக்கியா மீது பழி வருகிறது. பாக்கியா எவ்வளவோ சொல்லியும் கூட ராதிகா அதை கேட்பதாக இல்லை. ராதிகா உங்களால் தான் நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன் நீங்க இனிமேல் என் வாழ்க்கையில் வராதீங்க என சொல்லி இருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் சென்ற கார் விபத்தில் சிக்கிய மிளா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அதனால் பாக்கியா மிகவும் வருத்தப்படுகிறார். இந்நிலையில் கோவிலுக்கு ஜெனி வர அங்கே ராதிகாவும் வருகிறார். அப்போது ராதிகாவிடம் ஜெனி ஆன்டி மீது எந்த தவறும் இல்லை ஆனால் நீங்க அவரை அப்படி பேசியதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார். நீங்க தான் தொழில் செய்ய காரணமாக இருந்தீர்கள் ஆனால் நீங்களே அவரை தவறாக நினைத்ததை நினைத்து அவர் டெய்லி எங்களிடம் சொல்லி வருத்தப்படுவார் என சொல்கிறார். அதை கேட்டு ராதிகாவுக்கு வருத்தமாக இருக்கிறது.

ExamsDaily Mobile App Download

இந்நிலையில் ராதிகா கோபியிடம் சொல்லி வருத்தப்பட நான் டீச்சரிடம் பேச வேண்டும் என சொல்கிறார். ஆனால் கோபி உன் மீது தவறு இல்லை என சொல்கிறார். ராதிகா பாக்கியா மீது அனுதாபமாக இருக்கிறார். பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்க ராதிகா பாக்கியா வீட்டிற்கு வருகிறார். அப்போது ராமமூர்த்தி ராதிகாவிடம் போட்டோ காட்ட முயற்சி செய்கிறார். கோபியின் புகைப்படத்தை ராதிகா பார்த்துவிட்டால் சீரியலில் பெரிய திருப்பம் வந்துவிடும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!