ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கோபியை கண்டபடி அடிக்கும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!
மற்றவர்கள் அனைவரும் கோபியை பற்றி தவறாக கூறினாலும் கோபி மீது பாக்கியா அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், தற்போது கோபி ஏமாற்றி விட்டதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபியை கண்டவாறு அடிக்கும் படியான புரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதற்கு மேலும் கோபியால் பொய் சொல்லி தப்பிக்கவே முடியாது. அதாவது, கோபிக்கும் ராதிகாவிற்கும் இடையேயான உறவைப் பற்றி குடும்பத்தினர்கள் அனைவரின் முன்னிலையிலும் பாக்கியா அம்பலப்படுத்தி விட்டார். ஆரம்பத்தில் கோபி கண்டிப்பாக இப்படி செய்திருக்க மாட்டார் என ஈஸ்வரி கோபி மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்.
நடுரோட்டில் ‘Love Proposal’ செய்த CWC மணிமேகலை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
ஈஸ்வரி மட்டுமல்லாமல் பாக்கியாவும் கோபியின் மீது ஆரம்பத்தில் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதாவது செல்வி கோபியை பற்றி தவறாக சொல்லும் போதெல்லாம் கோபி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனக் கூறுவார். ஆனால், தன் கண் முன்னால் நடந்ததை பார்த்ததும் மொத்தமாக கோபியை பாக்கியா வெறுத்து விடுகிறார். பின்பு எழிலும் ஆரம்பத்திலேயே அப்பாவை பற்றி எனக்கு தெரிய வந்து விட்டது. அம்மாவை நினைத்து பார்த்து தான் தற்போது வரைக்கும் என் மனதுக்குள்ளேயே போட்டு கொண்டு அமைதியாக இருந்தேன்.
Exams Daily Mobile App Download
தற்போது அம்மாவிற்கும் அனைத்து விஷயங்களும் தெரிந்துவிட்டது. இதற்கு மேல் இந்த விஷயத்தை மூடி மறைத்து என்ன ஆகப்போகிறது ஈஸ்வரிடம் கூறுகிறார். இருந்தாலும் கோபி இப்படி செய்திருக்கவே மாட்டார் என ஈஸ்வரியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதாவது, மருத்துவமனையில் கோபியையும் ராதிகாவைவும் ஒன்றாகப் பார்த்த பிறகுதான் பாக்கியாவிற்கு அனைத்து விஷயங்களும் புரிய வருகிறது. அதாவது ராதிகாவை பார்த்ததும் கோபி ஏன் ஓடி ஒளிந்தார் எனவும், ராதிகாவை பார்க்க ஏன் கோபி மறுத்தார் என அனைத்து கேள்விகளுக்கும் பாக்கியாவிற்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. இந்நிலையில் இத்தனை நாட்களாக உங்களை நம்பி கொண்டிருந்தேன். தற்போது என்னை ஏமாற்றி விட்டீர்கள் என கூறி கோபியை பாக்கியா அடிப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.