விவாகரத்து பத்திரத்துடன் வந்த கோபி, குங்குமம் வைக்க சொன்ன பாக்கியா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், அடுத்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி விவாகரத்து பத்திரத்துடன் பாக்கியாவிடம் வர, வீட்டில் சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்யப்படுகிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பப்பெண்ணான பாக்கியாவை அவரது கணவர் கோபி ஏமாற்றுகிறார். கோபி ஏமாற்றுவது தெரிந்துக் கொண்ட கோபியின் தந்தை ராமமூர்த்தி உடல்நிலை சரி இல்லாமல் போகிறது. கோபியின் உண்மையை வெளியே கொண்டு வர ராமமூர்த்தி வேகமாக வர அப்போது அவர் கால் தடுக்கி கீழே விழுந்து தலையில் அடிபடுகிறது. அதனால் அவருக்கு பக்கவாதம் வந்து பேச முடியாமல் போகிறது.
கோமாளிகளை அடிக்க ஆசை தான் – சர்ச்சையை பற்றி வாய் திறந்த Chef தாமு!வைரலாகும் பதிவு!
கோபி அவரை நினைத்து வருத்தப்பட்டாலும் ராதிகாவை விடமுடியாமல் போகிறது. அதனால் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் கோபி இருக்கிறார். ஆனால் ராதிகா விவாகரத்து ஆன சந்தோஷத்தில் கோபியை விவாகரத்து வாங்க சொல்லி அவசரப்படுத்துகிறார். இந்நிலையில் தற்போது அடுத்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தாத்தாவை நினைத்து ஈஸ்வரி வருத்தமாக இருக்கிறார். அவரை சமாதானம் செய்ய பாக்கியா வீட்டில் சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்கிறார்.
ஆனால் மறுபக்கம் கோபி ராதிகா உடன் வக்கீலை சந்திக்க செல்கிறார். வக்கீல் இந்த நோட்டீஸில் உங்களது மனைவியிடம் கையெழுத்து வாங்கினால் போதும் என சொல்ல, கோபி அந்த பத்திரத்துடன் வீட்டிற்கு வருகிறார். அங்கே சுமங்கலி பூஜை நடக்க கோபி பத்திரத்துடன் அமர்ந்து இருக்கிறார். அப்போது கோபியை பாக்கியாவின் திருமாங்கல்யத்திற்கு குங்குமம் வைக்க சொல்ல, கோபி வைக்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைகிறது.