‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி? அதிர்ச்சியில் குடும்பம்! ஷாக் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது வாய் பேச முடியாமல் இருந்து வரும் ராமமூர்த்தி அடுத்த கட்ட கதைக்களத்தில் திடீரென இறந்து போவதை போல சமூக வலைதளங்களில் வெளியான ப்ரோமோ ஒன்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் சில எதிர்பாராத சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. இந்த சீரியலில் இதுவரையிலும் கோபி செய்து வரும் அட்டகாசங்களை பொறுத்துக் கொள்ளும் ராமமூர்த்தி, இறுதியில் கோபி பற்றிய உண்மையை தனது குடும்பத்தாரிடம் சொல்லி விடலாம் என்று முடிவு எடுக்கிறார். இதனால் குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் வரப்போகிறது என்று ராமமூர்த்தி சிந்தித்து கொண்டு வர, மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து வாய் பேசமுடியாமல் போகிறார்.
‘பாம்பு பிடி’ மன்னன் வாவா சுரேஷின் தற்போதைய நிலைமை இதுதானா? ஷாக்கிங் தகவல்!
இப்போது அப்பாவின் இந்த நிலைமைக்கு தான் மட்டுமே காரணம் என கோபி வருந்திக்கொண்டிருக்கிறார். அதனால் அவர் ராதிகாவை விட்டு விலகுவாரா என்று எதிர்பார்த்தால் அது தான் நடக்கவில்லை. மீண்டுமாக கோபி, ராதிகாவுடன் ஆன தனது காதலை தொடர்ந்து வருகிறார். இதற்கிடையில் ராதிகா – கோபியின் திருமணம் தொடர்பான விஷயங்களும் ஒரு பக்கம் போய்க்கொண்டே இருக்கிறது. இப்போது கோபியின் திருமணம் பற்றிய உண்மையை அறிந்திருக்கும் ராமமூர்த்தி எப்படி அதனை தடுப்பார் என்று ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மீதான எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் வாய் பேச முடியாமல் முடியாமல் படுத்தப்படுக்கையாக இருந்து வரும் ராமமூர்த்தி திடீரென மரணத்தை தழுவுவது போல எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது. உண்மையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி இப்போது தான் மெல்ல மெல்ல குணமடைந்து வருவதை போல காட்டப்பட்டு வரும் சூழலில், இது போன்ற காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.