விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் வீட்டை விட்டு விரட்டப்பட்ட இனியா – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் குடும்பமே பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கும் நிலையில், கோபிக்கு அடுத்தபடியாக அனைவரும் வெறுக்கும் படி நடந்து கொள்ளும் இனியா, இனி வரும் எபிசோடுகளில் அவர் வீட்டை விட்டு விரட்டப்படுவாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்தாலும், கதாநாயகனே சீரியலில் வில்லனாக இருப்பது தமிழ் சின்னத்திரையில் இதுவே முதன்முறையாகும். அழகான பாசமான குடும்பத்தை விட்டு கோபி வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதால் ரசிகர்கள் பலர் மோசமான நபர் என்றால் அது கோபி தான் என சமூக வலைத்தளங்களில் திட்டி தீர்க்கின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் குடும்பத்தில் கோபிக்கு ஆதரவாக இருந்த ஈஸ்வரியும் பாக்கியாவை புரிந்து கொண்டார்.
ஜீ தமிழ் “சத்யா” சீரியலில் இருந்து நான் விலகுகிறேனா? நடிகர் விஷ்ணு விஷால் ஓபன் டாக்!
அவர் கோபி பேசியது பொறுக்காமல் பாக்கியாவிடம் பணத்தை கொடுக்க கோபிக்கு என்ன செய்வது என தெரியவில்லை. இதெல்லாம் இனியாவால் தான் வந்தது. அவர் டாக்டருடன் பழகியதை பார்த்து தான் கோபி பாக்கியாவிடம் சண்டை போட்டார். இனியாவிற்கு தான் செய்வது தவறு என தெரிந்தும் கூட அதை ஏற்றுக் கொள்ளாமல் வேறு வழியில் சண்டை மூட்டிவிடுகிறார். முதலில் செழியன் ஜெனிக்கு, இப்போது கோபி பாக்கியாவிற்கு இடையே சண்டை மூட்டுகிறார்.
விஜய் டிவி “பிக் பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் – ரசிகர்கள் ஷாக்!
அதனால் கோபிக்கு அடுத்தபடியாக அதிக நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும் கதாபாத்திரமாக இனியா இருக்கிறார். சிறு பெண் தான் என மன்னித்தாலும் அவள் செய்யும் காரியங்கள் சிறு பிள்ளை போல இல்லை. அதனால் ரசிகர்கள் அவரை படிக்க வெளிநாட்டிற்கு எங்கையாவது அனுப்பிவிட வேண்டும் சீரியலில் இது தேவை இல்லாத கதாபாத்திரம் என கமெண்ட் செய்து வருகிறார். ஆனால் கோபி ராதிகாவை திருமணம் செய்தாலும் இனியாவை தன்னுடன் கூட்டிக் கொண்டு செல்ல திட்டமிடுகிறார் என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.