“பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அரங்கேறிய கோபி, ராதிகா திருமணம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி’ சீரியல் இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அதிரடி திருப்பமாக கோபி பாக்கியா திருமண வைபோகம் நடைபெற இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியலில், பாக்கியா படிக்காத பெண்ணாக இருந்தாலும் தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். அதனால் பல கஸ்டங்களையும் அவமானங்களையும் தாண்டி தனக்கொரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார். அவரது கணவர் கோபி பாக்கியாவை பற்றி புரிந்து கொள்ளாமல் அழகான குடும்பத்தை விட்டு வேறு ஒரு உறவை தேடுகிறார்.
‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறிய வனிதா – இதற்கு தானாம்? புதிய விஜேவாக சிம்பு அறிமுகம்!
அவர் தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்ய நினைக்கிறார். அதற்காக பாக்கியாவிற்கு தெரியாமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்குகிறார். இந்நிலையில் இருவரின் திருமணம் அன்று தான் பாக்கியா மற்றும் குடும்பத்திற்கு உண்மை தெரிய போகிறது. மேலும் கோபியின் தந்தை ராமமூர்த்திக்கு கோபி ராதிகாவை திருமணம் செய்ய இருப்பது பற்றி மயூரா சொல்ல, அவருக்கு பயங்கரமாக கோவம் வருகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக இனி இவர் தானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அதனால் அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகிறது. இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் குடும்பமே இதை எப்படி ஏற்றுக் கொள்ளும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ராதிகாவுக்கு பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மை தெரியாமல் இருக்கிறது. அதுவும் தெரிந்த பின்னர் ராதிகா கோபியை திருமணம் செய்ய ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.