பாக்கியாவை படத்திற்கு கூப்பிடும் எழில், கோபியை வர வேண்டாம் என எச்சரிக்கை – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த வாரம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், அடுத்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எழில் படம் திரையரங்கில் வெளியாகி இருப்பதால் அவர் பாக்கியாவை பார்க்க கூப்பிடுகிறார். ஆனால் பாக்கியா கோபியை கூப்பிட சொல்ல அது குறித்து ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசியான பாக்கியா மற்றும் கோபியின் குடும்பக் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. கோபி தன்னுடைய மனைவி பாக்கியா மாடலாக இல்லை என்ற ஒரே காரணத்தால் அவரை பிரிய வேண்டும் என நினைக்க அதெல்லாம் தெரியாமல் கணவரே தெய்வம் போல பாக்கியா அவரையும், அவருடைய அம்மா அப்பா மற்றும் குடும்பத்தை பார்த்து வருகிறார். கோபி பாக்கியாவை விட்டு விட்டு தன்னுடைய காதலி ராதிகாவை கரம் பிடிக்க இருக்கிறார்.
இந்த விஷயம் கோபிக்கு அப்பாவிற்கும் கோபியின் இரண்டாவது மகன் எழிலிற்கும் தெரியும். ஆனாலும் அவர்கள் பாக்கியா இதை தாங்கி கொள்ளமாட்டார் என்பதால் சொல்லாமல் மறைக்கின்றனர். கோபியை எச்சரிக்கை செய்தாலும் அவர் கேட்பதாக இல்லை. பாக்கியாவிற்கு தெரியாமல் அவரை விவாகரத்து செய்துவிட்டார். சென்ற வாரம் ராதிகாவுடன் ஊர் சுற்றி பார்க்க கோபி வர எழில் அவரை பார்த்துவிடுகிறார். அதனால் இனிமேல் அம்மா கஷ்டப்படும் படி நடந்தால் கொன்னுடுவேன் என எச்சரிக்கிறார்.
இப்படி கதை சென்று கொண்டிருக்க எழில், அமிர்தா காதல் மிகவும் பக்குவம் அடைந்து கொண்டே இருக்கிறது. அமிர்தாவிற்கும் எழில் மீது காதல் வருகிறது. எழில் தன்னுடைய பட வேலைகளை முடித்துவிடுகிறார். இந்நிலையில் பாக்கியாவிடம் நாளைக்கு படம் திரையரங்கில் வர இருக்கிறது பார்க்கலாமா என கேட்க அப்பாவை கூப்பிடு என பாக்கியா சொல்கிறார். எழில் கோபியிடம் சென்று நாளைக்கு படம் வெளியாக இருப்பதாக சொல்ல, தயவு செய்து என் படத்திற்கு வராதீங்க என சொல்கிறார். அதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார்.