கோபியை வீட்டை விட்டு அனுப்பிய ராதிகா, எழிலுக்கு பெண் பார்க்கும் ஈஸ்வரி – ‘பாக்கியலட்சுமி’ இன்றைய எபிசோட்!

0
கோபியை வீட்டை விட்டு அனுப்பிய ராதிகா, எழிலுக்கு பெண் பார்க்கும் ஈஸ்வரி - 'பாக்கியலட்சுமி' இன்றைய எபிசோட்!
கோபியை வீட்டை விட்டு அனுப்பிய ராதிகா, எழிலுக்கு பெண் பார்க்கும் ஈஸ்வரி - 'பாக்கியலட்சுமி' இன்றைய எபிசோட்!
கோபியை வீட்டை விட்டு அனுப்பிய ராதிகா, எழிலுக்கு பெண் பார்க்கும் ஈஸ்வரி – ‘பாக்கியலட்சுமி’ இன்றைய எபிசோட்!

விறுவிறுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் பல புது புது ட்விஸ்ட்டுகளை கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று நடந்த நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இப்பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

சின்னத்திரையில் எவ்வளவு தான் புது புது தொடர்கள் வந்தாலும் அவற்றில் சிலதே அதிக ரசிகர் பெருமக்களை ஈர்க்கும். அந்த வரிசையில் அதிக பார்வையாளர்களை கொண்ட பாக்கியலட்சுமி தொடர் சமீப நாட்களாக விறுவிறுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. கோபி மீது சந்தேகம் கொண்ட ராதிகா இன்றைய எபிசோடில் வெளியே போங்க கோபி என சொன்னதும், அதிர்ச்சியில் உறைந்து என பேசுவதென தெரியாமல் மனதுக்குள் புழுங்கியவராக ராதிகாவை பார்த்து உன்னையே சுற்றி சுற்றி வந்தேனே எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் என சொல்லி இடத்தை விட்டு நகர்கிறார்.

நடிகை ஆல்யா மனசாவின் பிறந்த நாள் – சர்பிரைஸ் கொடுத்த சஞ்சீவ்! ரசிகர்கள் வாழ்த்து!

ஆனாலும் ஏக்கமாய் மீண்டும் சமாதானம் செய்ய முயன்ற கோபியை மீண்டும் வீட்டின் கதவை சட்டென சாத்தி விடுகிறாள் ராதிகா. கோபியும் இதற்கெல்லாம் முக்கிய காரணம் மூர்த்திதான் என மனதுக்குள் திட்டிக்கொண்டே காரில் ஏறிய கோபி மறு கணம் வேதனையில் ராதிகாவை நினைத்து, அவளுக்கு உண்மை தெரிஞ்சா என்ன விட்டு போயிடுவா, இதுக்காகவா நான் இவ்ளோ நாள் அவ்ளோ கஷ்டப்பட்டேன் என புலம்பி கொண்டே செல்கிறார். இந்தப் பக்கம் எழில் வீட்டிற்கு வந்து இன்னும் பத்து நாளில் என்னுடைய படம் ரிலீஸ் ஆகப்போகுது என கூறுகிறான். அவன் சொன்னதை கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வாழ்த்து மழையை பொழிகின்றனர்.

அந்த சமயத்தில் ஈஸ்வரி எழிலுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடலாம், இவனா ஒரு பொண்ண கூட்டிட்டு வரதுக்குள்ள நாமலே பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் என சொல்ல, பாக்யா அதெல்லாம் வேண்டாம். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும் என சொல்லி காப்பாற்றி விடுகிறார். இந்த பக்கம் கோபி அவரது நண்பர் சதீஷை சந்தித்து நடந்ததை எல்லாம் கூறி புலம்புகிறார். அதாவது, பாக்கியா பொழைக்க தெரிஞ்சவ, அவ நாலு பெண்களோட சேர்ந்து சமையல் தொழிலை செஞ்சு வாழ்ந்துக்குவா. அதே மாதிரி ஒரு அப்பாவா என் பிள்ளைங்களுக்கும், ஒரு நல்ல மகனா என் அம்மா அப்பாவுக்கும் எல்லா கடமையும் முடிச்சிட்டேன்.

Exams Daily Mobile App Download

இனி நான் எனக்காக வாழணும்னு ஆசை படுறேன் அது தப்பா? ராதிகாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவளுக்காக தான் நான் இவ்ளோ கஷ்டப்பட்டு பல ரிஸ்க் எடுக்குறேன். ஆனா இதெல்லாம் அவ புரிஞ்சுக்காம இப்படி பன்றா. ராதிகா கூட இருந்த இந்த கொஞ்ச நாட்கள் நான் அவ்ளோ சந்தோசமா இருந்தேன். அந்த சந்தோசம் என விட்டு போயிடுமோன்னு பயமா இருக்கு. எனக்கு ராதிகா கண்டிப்பா வேணும்‌ அதற்காக நான் எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கிறேன் என சொல்லி கண் கலங்குகிறார். இந்தப் பக்கம் கோபியை திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் ராதிகா அப்செட்டில் அமர்ந்துக் கொண்டு இருக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!