ராதிகா, கோபி பற்றிய உண்மையை கண்டுபிடித்த பாக்கியா – ரசிகர்களை ஷாக் ஆக்கிய ப்ரோமோ!
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகரும் விஜய் தொலைக்காட்சியின் மெகா ஹிட் தொடர் பாக்கியலட்சுமி தற்போது புயல் வேகத்தில் சூடுபிடித்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது அடுத்த கட்டமாக இந்த சீரியலில் ராதிகா மற்றும் கோபி இருவர் பற்றியும் பாக்கியா தெரிந்து கொள்வது போன்ற ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது.
ப்ரோமோ ரிலீஸ்:
விஜய் டிவியில் ஆரம்பத்தில் டல் அடித்துக்கொண்டு கொண்டு சென்ற பாக்கியலட்சுமி சீரியல் கோபி, பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு முன்னாள் காதலி ராதிகாவுடன் லூட்டி அடித்த காட்சிகள் மூலம் விருவிருப்பு கட்டத்தின் உச்சிக்கு சென்றது. இவ்வாறு பல ரசிகர் பட்டாளங்களை குவித்த பாக்கியலட்சுமி சீரியல் தற்போது அனைவரது எதிர்பார்ப்புக்கும் ஏற்றவாறு கதைக்களத்தில் புது ட்விஸ்ட் ஒன்று புகுத்தபட்டுள்ளது. அதாவது இந்த வார எபிசோட்டின் ப்ரோமோ தற்போது வெளியாகி பார்வையாளர்களின் மத்தியில் அதிர்ச்சியையும் அதிக ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கலந்து கொள்ளும் ரக்சன் – குஷியில் ரசிகர்கள்!
ஏனெனில் இவ்வளவு நாள் கோபி பாக்கியாவிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருந்து வந்த நிலையில் தற்போது அன்பு கணவன் கோபியின் பல நாள் முகம் கிழிந்து உண்மை முகம் திரைபோட்டு காட்டப்படுவது போல் காட்சிகள் அமைந்துள்ளது. தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோபியை ராதிகா சந்திக்க வருவதைப் போன்றும் அப்போது அங்குள்ள நர்ஸ் நீங்கள் கோபிக்கு என்ன வேண்டும் என கேட்க ராதிகாவும் நான் அவருடைய மனைவி என சொல்லி கோபியை சந்திக்கிறார்.
Exams Daily Mobile App Download
அங்கிருக்கும் ராதிகாவை பார்த்த பாக்கியா குழப்பத்தில் அவரை பின்தொடர, அங்குள்ள நர்ஸ் பாக்கியாவை தடுத்து நீங்கள் யாரென விசாரிக்கிறார். அப்போது நான் அவரது மனைவி என பாக்கியாவும் சொல்ல உடனே நர்ஸ் அப்போ இப்போ போனவங்க யாரு? என் கேட்கிறார். அதிர்ச்சியில் பாக்கியா கோபி அறைக்கு சென்று பார்த்த சமயம் அங்கு ராதிகா இருப்பதையும் கோபி ராதிகாவின் கைகளைப்பிடித்து நீ இல்லனா என் வாழ்க்கையே இல்லை என்ன விட்டு போயிடாத என சொல்லி அழுவதை பார்த்தும் பாக்கியா அதிர்ச்சியில் உறைந்து விடுவது போன்றும் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.