குடும்பத்தை அக்கறையுடன் பார்க்கும் பாக்கியா, கண்கலங்கிய ஈஸ்வரி – வெளியான “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தாத்தாவிற்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதால் குடும்பமே சோகத்தில் இருக்கிறது. இந்நிலையில் கணவரை நினைத்து உடைந்து போயிருக்கும் ஈஸ்வரிக்கு பாக்கியா தான் ஆதரவாக இருக்கிறார்
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் வந்துள்ளது. கோபி ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்ததை மயூரா தாத்தாவிடம் சொல்ல, தாத்தா நேராக கோபியிடம் இது பற்றி கேட்கிறார். ஆனால் கோபி நான் அப்படி தான் செய்வேன் என பிடிவாதமாக சொல்ல வீட்டில் இருக்கும் அனைவரிடமும் இது பற்றி சொல்வேன் என தாத்தா சொல்கிறார். சொல்லுங்கள் என கோபி சொல்ல, தாத்தா வேகமாக வரும் போது மாடி படியில் கால் தவறி கீழே விழுகிறார்.
தமிழகத்தில் உள்ள 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தக விநியோகம் தொடக்கம் – முக்கிய அறிவிப்பு!
அதனால் தலையில் அவருக்கு அடி பட்டு அவருக்கு பக்கவாதம் வருகிறது. அதனால் இனிமேல் சில நாட்களுக்கு அவரால் பேச முடியாது எழுந்து நடக்க முடியாது என டாக்டர் சொல்லி இருக்கிறார். இப்படி இருக்க தாத்தாவை மருத்துவமனையில் பார்த்து குடும்பத்தினர் வருத்தப்படுகின்றனர். அவரை வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து குடும்பத்தில் அனைவரும் சிரித்து பேசி சந்தோசமாக சிரிக்கவைக்கின்றனர். ஆனால் ஈஸ்வரி மட்டும் தாத்தாவை நினைத்து வருத்தப்படுகிறார்.
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வீட்டு வாடகைப்படி உயர்வு!
அவர் சரியாக சாப்பிடாமல் தூங்காமல் இருக்க கோபியும் பாக்கியாவும் ஆறுதல் சொல்கின்றனர். இந்நிலையில் தற்போது அடுத்த எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஈஸ்வரி தாத்தாவை நினைத்து சாப்பிட முடியாமல் இருக்க பாக்கியா சாப்பிட சொல்கிறார். ஈஸ்வரி நீ தான் இந்த குடும்பத்தையே பார்த்துக் கொள்கிறாய் என நினைத்து பாக்கியாவிற்கு கண்ணீருடன் நன்றி சொல்கிறார்.