ராதிகாவுடன் திருமணம், பாக்கியாவை திட்டி தீர்க்கும் கோபி – சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியலில் சமீப நாட்களாக தாத்தாவின் மருத்துவ சிகிச்சை குறித்த காட்சிகள் தான் வந்து கொண்டிருக்கும் நிலையில், கோபியிடம் பணம் கேட்ட பாக்கியாவை அவர் திட்டி தீர்க்கிறார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்:
பாக்கியலட்சுமி சீரியல் ராமமூர்த்தி தாத்தாவின் எதிர்ப்பாராத விபத்தினால் தற்போது சற்று பரபரப்பாக கதை நகர்ந்து வருகிறது. கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப்போவதை அறிந்த ராமமூர்த்தி இது பற்றி கோபியிடம் கேட்க போகும் போது தான் மாடி படியில் இருந்து விழுந்து விடுவார். அதன்பிறகு வாய் பேச முடியாமல், காய் கால் வராமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். இதற்கிடையில், கோபி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுகிறார்.
உயிருக்கு ஆபத்தான இறுதி நிமிடங்களில் கோதை, அதிர்ச்சியில் தமிழும் சரஸ்வதியும் – ப்ரோமோ ரிலீஸ்!
இது பற்றி எதுவும் தெரியாமல் பாக்கியாவை முழுதாக கோபியை நம்பிக் கொண்டிருக்கிறார். எதுவும் படிக்காமல் கையெழுத்து போட்டதால் கோபி முதலில் சற்று யோசிப்பார். ஆனால் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் வந்த உடன் அது பற்றி எதுவும் யோசிக்காமல் சென்று விடுவார். இன்னொரு புறம் தாத்தாவிற்கு மாத்தி மாத்தி மருத்துவ செலவுகள் வந்து கொண்டிருப்பதால் செலவு அதிகமாகி வருகிறது. ஸ்கேன் எடுக்க செழியன் பணம் கொடுத்து விட்டு, தாத்தாவிற்கு தான் அதிகமாக செலவு செய்துவிட்டதாக ஜெனியிடம் கோவப்படுவான்.
கதிருக்காக ஆசையுடன் சட்டை தைத்து கொடுக்கும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!
இது தெரிந்து பாக்கியா அந்த பணத்தை செழியனிடம் கொடுக்க வேண்டும் என்று கோபியிடம் வந்து பணம் கேட்பார். ஆனால் கோபி உன் பெயரில் தான அப்பா எல்லா சொத்துக்களையும் எழுதி வைத்துள்ளார். அப்புறம் எதுக்கு என்கிட்ட காசு கேட்கிற என்று சொல்லி பயங்கரமாக திட்டி விடுவார். இதனால் வருத்தப்பட பாக்கியா நான் என் செலவிற்கு பணம் கேட்கல, செழியனிற்கு கொடுக்க தான் கேட்கிறேன் என்று சொல்லி விட்டு சென்று விடுவாள். இதோடு இந்த புரோமோ முடிவடைகிறது.