“பாக்கியலட்சுமி” சீரியல் செய்த சாதனை, படப்பிடிப்பில் கொண்டாடட்டம் – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளதை அடுத்து, அந்த சாதனையை சீரியல் டீம் கொண்டாடி உள்ளனர்.
“பாக்கியலட்சுமி” சீரியல்
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது “பாக்கியலட்சுமி” சீரியல். இந்த சீரியல் பெங்காலி சீரியலின் ரீமேக் தான். குடும்பம் மட்டுமே முக்கியம் என்று வாழும் கதாநாயகி பாக்கியா, வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு உற்றதுணையாக அவரது மகன் எழில் இருக்கிறார். அவரது கணவராக வரும் கோபி அவரை அந்த வீட்டில் ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் இருக்கிறார்.
விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு பெறும் சம்பளம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க!
கூடுதலாக, அவரது தோழியுடன் வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார். இது எதுவும் அறியாமல் பாக்கியா தனது மசாலா பிசினஸில் பிசியாக வேலை பார்த்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அமிர்தா – எழில் காதல் ஒரு பக்கம் நகர்ந்து கொண்டு இருக்கிறது. எதார்த்தமான குடும்ப கதையுடன் இந்த சீரியல் ஒளிபரப்பபடுவதால், இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்படியாக இருக்க, இந்த சீரியல் ஒளிபரப்ப ஆரம்பமாகி 1 வருடம் நிறைவடைந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை சீரியல் குழுவினர் கொண்டாடி உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி முதல் இந்த சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டு வருகின்றது. தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அந்த சீரியலில் செல்வியாக நடிக்கும் நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கேப்சனாக “இன்றோடு பாக்கியலட்சுமி ஆரம்பித்து ஒன் இயர் ஆகுது வாழ்த்துக்கள் எங்கள் டீம்க்கு… எங்களுக்கு ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் உங்களுக்கும் நன்றிகள்… என்றும் உங்கள் ஆதரவோடு…” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.