விவாகரத்து நோட்டீஸுடன் பாக்கியாவை சந்திக்கும் கோபி, ராதிகாவுடன் திருமணம் நடைபெறுமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவியின் மெகா ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி சீரியல் தற்போது மிகவும் அதிக பரபரப்பாக சென்று வருகிறது. இந்நிலையில், கோபி மற்றும் பாக்கியாவின் விவாகரத்து தொடர்பான காட்சிகள் சீரியலில் வருகிறது.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் தற்போது அதிக ஹிட் ஆக செல்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை சுற்றியே தான் கதை நகர்கிறது. பாக்கியா மற்றும் குடும்பத்திற்கு தெரியாமல் கோபி ராதிகாவோடு பழகி வருகிறார். அனால் பாக்கியா ராதிகா இடையில் நட்பு இருக்கிறது. பாக்கியாவோடு எதிர்பாராத வகையில் பல ஆரம்பித்த ராதிகா அவரின் மீது அதிக மரியாதையை வைத்துள்ளார். ஆனால் கோபியின் மனைவி பாக்கியா தான் என்ற விஷயம் ராதிகாவிற்கு தெரியாது.
மாநிலத்தின் இரு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – அரசு அதிரடி நடவடிக்கை!
கோபி ராதிகாவின் பழக்கத்தை ராமமூர்த்தி அறிந்து ஏற்கனவே கோபியை கண்டித்து உள்ளார். ஆனால் கோபி பொய் சத்தியம் செய்து விட்டு மீண்டும் ராதிகா வீட்டிற்கு சென்று வந்து கொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில், ராமமூர்த்தி திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிறார். இன்னோரு புறம் கோபி ராதிகாவின் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. ராதிகாவிற்கு விவாகரத்து கிடைத்து விட, கோபியும் விவாகரத்து பெற்று வர ராதிகா கூறுகிறார்.
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
இதனால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க கோபி வருகிறார். இதற்கான மனதைரியத்தை ஒருவழியாக வரவழைத்துக் கொண்டு வரும் போது வீட்டில் சுமங்கலி பூஜை நடக்கிறது. இதனால் கோபியை பாக்கியாவிற்கு குங்குமம் வைக்க சொல்கிறார்கள். பயந்து கொண்டே குங்குமம் வைக்கிறார். இதன் பிறகு பாக்யவிடம் விஷயத்தை எடுத்து சொல்ல இருப்பதாகவும், இதனால் வீட்டில் பூகம்பம் வெடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.