கோபி பற்றிய உண்மையை குடும்பத்தினரிடம் உடைத்த ராமமூர்த்தி – ப்ரோமோ ரிலீஸ்!!
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அவ்வாறு ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பற்றிய உண்மையை குடும்பத்தினரிடம் ராமமூர்த்தி கூறியுள்ளவாறு உள்ள ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. நேற்றைய எபிசோடில் கோபியும் பாக்கியாவும் ஈஸ்வரி பேச்சை மீறி ஜெனி வீட்டிற்கு சென்று ஜெனியை சமாதானம் செய்து அவர்களுடன் அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரோமோவில் கோபியின் அப்பாவான ராமமூர்த்தி ஊருக்கு சென்று வருகிறார்.
சக்தியை விட்டு பிரிய முடிவெடுக்கும் வருண், அதிர்ச்சியில் அப்பா – வெளியான ப்ரோமோ!!
அப்போது வீட்டில் இருக்கும் அனைவரும் ஊருக்கு சென்று திரும்பும் ராமமூர்த்தியை வரவேற்கின்றனர். பின்பு இந்நிலையில் அவரது மனைவி இவ்வளவு நாள் ஊரில் என்ன செய்துவிட்டு வருகிறீர்கள் என்று கேட்கிறார். அவர்களிடம் சொத்துக்களை உயில் எழுதி வைத்துவிட்டு வந்திருப்பதாக கூறுகிறார். அப்போது அவரது மனைவி நம்முடைய சொத்துக்கள் அனைத்தும் நமக்கு பிறகு எனது மகன் கோபிக்கு தானே என்று கூறுகிறார். அதற்கு ராமமூர்த்தி எனது சொத்துக்களை எனது மருமகள் பாக்கியா மற்றும் எனது பேரப்பிள்ளைகளுக்கு மட்டுமே சொத்து சேரும் என்று கூறுகிறார்.
குழந்தை பிறந்த கையோடு அஞ்சலியுடன் ஆட்டம் போட்ட நடிகை பரினா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
மேலும் கோபிக்கு எனது சொத்து எதுவும் கோபிக்கு கிடையாது என்றும் ராமமூர்த்தி கூறுகிறார். கோபி அந்த இடத்திலிருந்து எழுந்து செல்கிறார். பின்னர் கோபியின் தாயார் ஈஸ்வரி கோபி என்ன தவறு செய்தான் ஏன் அவன் மேல் இவ்வளவு கோபம் என்று கேட்கிறார். கோபமடைந்த ராமமூர்த்தி அவரது மனைவியிடம் இது எனது சுய சம்பாத்தியம் என்றும் இதில் யாரும் தலையிட கூடாது என்றும் கூறுகிறார். அவரது இந்த முடிவை புரிந்துகொள்ள முடியாமல் பாக்கியா, எழில் மற்றும் ஈஸ்வரி உள்ளிட்டோர் குழப்பத்தில் உள்ளனர்.