சந்தர்ப்ப சூழலால் அம்ரிதாவை திருமணம் செய்துகொள்ளும் எழில் – பாக்கியா ஏற்றுக்கொள்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!

0
சந்தர்ப்ப சூழலால் அம்ரிதாவை திருமணம் செய்துகொள்ளும் எழில் - பாக்கியா ஏற்றுக்கொள்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!
சந்தர்ப்ப சூழலால் அம்ரிதாவை திருமணம் செய்துகொள்ளும் எழில் - பாக்கியா ஏற்றுக்கொள்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!
சந்தர்ப்ப சூழலால் அம்ரிதாவை திருமணம் செய்துகொள்ளும் எழில் – பாக்கியா ஏற்றுக்கொள்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!

ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்வாரா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த வாரம் எழில் சந்தர்ப்ப சூழ்நிலையால் அமிர்தாவை திருமணம் செய்வது போன்றும், ஏற்கனவே குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கிறது. இதனை எப்படி சமாளிக்கப் போகிறோம் என புலம்பும்படியான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்வாரா அல்லது கடைசி நேரத்தில் குடும்பத்தினர் திருமணத்தை தடுத்து நிறுத்த போகிறார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராதிகாவைத் தான் கோபி திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்கிற விஷயம் ஏற்கனவே கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரியும். இதன் பிறகு கோபியை ராமமூர்த்தி கண்டித்த போது நான் பாக்கியாவை விவாகரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

பாரதியை மறந்துவிட்டு வேறொரு திருமணம் செய்யும்படி வற்புறுத்தும் ஷர்மிளா – பைத்தியம் போல கதறும் வெண்பா!

உடனே ராமமூர்த்தி பயந்து பாக்கியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும், அவள் மிகவும் அப்பாவி என நினைத்து கோபியை கண்டித்து விட்டு விடுகிறார். ஆனாலும் கோபியின் ஆட்டம் அடங்குவதாக தெரியவில்லை. முழுக்க முழுக்க ராதிகாவுடன் தான் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். இப்படியே போனால் பாக்கியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என பயந்து பாக்கியாவும் கோபியும் ஒன்றாக இருக்கும்படியான புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார். ஆனால் ராதிகா ஏற்கனவே அந்த வீட்டை காலி செய்து வேறு ஒரு வீட்டிற்கு சென்று விடுகிறார்.

Exams Daily Mobile App Download

இதனை அடுத்து எழிலுக்கு தெரிந்தால் நமக்கு உதவி செய்வார் என நினைத்து எழிலிடம் அனைத்து உண்மைகளையும் தாத்தா கூறுகிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் எழில் அமிர்தாவை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். தற்போது கட்டாயமாக அமிர்தாவை உடனே திருமணம் செய்ய வேண்டுமென ஒரு சூழ்நிலை அமைந்து விடுகிறது. ஏற்கனவே குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது திருமணம் செய்து கொண்டு சென்றால் இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என நினைக்கிறார். இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அமிர்தாவை திருமணம் செய்து கொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!