பாக்கியலட்சுமி சீரியல் ’கோபி’ சர்ச்சை கேள்விக்கு பதில் – வைரலாகும் வீடியோ!
பாக்கியலட்சுமி சீரியல் குறித்து மோசமாக ரசிகர் கேட்ட கேள்விக்கு கோபி சதீஷ் பதில் அளித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்களும் இந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரின் கதாநாயகியாக பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் பாக்கியா- சதீஷ் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. தற்போது சீரியல் உச்சகட்ட பரபரப்பில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அதாவது, கோபி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதற்கிடையில் கோபிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த தகவலை அறிந்த ராதிகா,பாக்கியா இருவரும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அப்போது ராதிகா, கோபியின் மருத்துவ செலவை பார்த்து கொள்கிறார். கோபி காதலிக்கும் நபர் ராதிகா என்ற உண்மை பாக்யாவுக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சியில் உச்சத்திற்கு செல்கிறார் பாக்கியா.
இனி என்ன நடக்கும்? பாக்யாவுக்கு ராதிகாவுக்கு இடையே பெரிய போர் நடக்குமா? இல்லை பாக்கியா ராதிகாவுக்காக கோபியா விட்டுக்கொடுப்பாரா? என்ற பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது சீரியல் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு கோபியாக நடிக்கும் சதீஷ் கொடுத்து இருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் பிடிக்காத பாக்கியா உடன் எப்படி மூன்று குழந்தை பெற்றீர்கள் என்று ரசிகர் கேட்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதற்கு சதீஷ் கூறியிருப்பது,” திருமணம் ஆகும் போது கோபிக்கு 24 வயது, பாக்யாவுக்கு என்ன வயது என்று ரைட்டர் சொல்லவில்லை. நான் எதாவது வயது சொல்லி சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை. கோபிக்கு அந்த வயதில் உடல் தேவைகள் இருந்திருக்கும், அதனால் மூன்று குழந்தைகள் பாக்யாவுடன் பெற்று இருக்கலாம் என நினைக்கிறேன்” என நடிகர் சதிஷ் தெரிவித்து இருக்கிறார். மேலும் இது சீரியல், நான் நடிகர், கொடுத்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன், அதனால் என்னை திட்டாதீர்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.