ஜீ தமிழில் புது சீரியலில் களமிறங்கும் ‘பாக்கியலட்சுமி’ நடிகர் ஆர்யன் – கதாநாயகி யார் தெரியுமா?
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆர்யன். தற்போது அவர் ஜீ தமிழில் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை மோக்ஷிதா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மூத்த மகனாக செழியன் கதாபாத்திரத்தின் மூலமாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் ஆர்யன். அவர் சில மாதங்களுக்கு முன் சீரியலில் இருந்து திடீரென விலகினார். அவருக்கு பதிலாக விகாஷ் சம்பத் சீரியலில் செழியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஆர்யன் சில மாதங்களுக்கு முன் தன்னுடைய காதலி ஷாபனாவை திருமணம் செய்து கொண்டார். ஷபானா ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் நடித்தவர்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வைல்ட் கார்டு என்ட்ரி ப்ரோமோ ரிலீஸ்!
சீரியலில் இருந்து விலகியதற்கு பின் ஆர்யன் வேறு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் ஜீ தமிழில் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் சீரியல் டைட்டில் குறித்த எந்த தகவலும் தற்போது வெளியாகவில்லை. ஆனால் இந்த சீரியலில் ஆர்யனுக்கு ஜோடியாக கன்னட நடிகை மோக்ஷிதா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியலை ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலை தயாரித்தவர்கள் தான் தயாரிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Exams Daily Mobile App Download
இந்நிலையில் ஆர்யனுக்கு ஜோடியாக நடிக்கும் மோக்ஷிதா, செம்பருத்தி சீரியலின் கன்னட மொழியாக்கம் சீரியலான பாரு என்ற சீரியலில் பாரு கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பதால் ரசிகர்கள் இந்த புது சீரியலுக்கு ஆவலுடன் எதிர் பார்த்து இருக்கின்றனர். மேலும் சாக்லேட் பாயாக இருக்கும் ஆர்யன் சின்னத்திரையில் மீண்டும் என்ட்ரி கொடுக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ ப்ரோமோ விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.