‘பாக்கியா வீட்டிற்கு வரும் மயூரி, பயந்து நடுங்கும் கோபி’ – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” தொடரில் இன்று செழியன் மற்றும் கோபி இருவரும் பேசாமல் செல்லுகின்றனர். ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி இருவரும் மயூரியை பார்த்து கொள்வதாக கூறுகின்றனர். மயூரியை தனது வீட்டில் பார்க்கும் கோபி பயப்படுகிறார்.
“பாக்கியலட்சுமி” சீரியல்
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் கோபியிடம் பேசுகிறார். ஆனால், கோபி செழியனிடம் பேசாமல் சென்று விடுகிறார். இதனால் செழியன் சாப்பிடாமல் எழுந்து விடுகிறார். இது குறித்து பாக்கியா கோபியிடம் பேசுகிறார். ஆனால், கோபியோ பாக்கியா எடுத்து இருக்கும் சமையல் காண்ட்ராக்ட் குறித்து கேட்கிறார். செழியன் குறித்து தான் பார்த்து கொள்வதாகவும் தெரிவித்து விடுகிறார். இதனால் பாக்கியா சோகத்துடன் சென்று விடுகிறார். பின், அவரை எழில் சமாதானம் செய்கிறார்.
கொரோனா நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு!!
ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி இருவரும் இனியா படிப்பதற்கு உதவியாக இருக்கின்றனர். பின், ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி வாக்கிங் முடித்து விட்டு ராதிகாவின் வீட்டிற்கு செல்லுகின்றனர். ராதிகா வெளியூர் செல்ல இருப்பதால் மயூரியை பார்த்து கொள்ள முடியாத சுழல் ஏற்படுகிறது. பின், இது குறித்து இருவரிடமும் ராதிகா கூறுகிறார். இதனால் தாங்கள் மயூரியை பார்த்து கொள்வதாக கூறி விட்டு ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி அழைத்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தூரத்தில் இருந்து மயூரியை ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி அழைத்து வருவதை கோபி பார்த்து விடுகிறார். இதனால் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்து விடும் கோபி தனியாக ரூமில் சென்று அமர்ந்து கொள்கிறார். தன்னை யாரும் தொந்தரவு செய்ய கூடாது என்றும் பாக்கியவிடம் கூறி விட்டு சென்று விடுகிறார். அவரது வித்தியாசமான நடவடிக்கைகளை பார்த்து விட்டு பாக்கியா குழப்பம் அடைகிறார். பின், பாக்கியா மயூரியை வீட்டிற்கு வரவேற்கிறார். பின், மயூரி வீட்டினர் அனைவரிடமும் நன்றாக பேசுகிறார். இதனை தூரத்தில் இருந்து பார்க்கும் கோபிக்கு பயம் தொற்றி கொள்கிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!