மாமியாரை ஸ்கூட்டியால் இடிக்கும் பாக்கியா, சமையல் கான்ட்ராக்ட்டை பிடித்து கொடுத்த கோபி’ – டுடே எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று பாக்கியா வண்டி ஓட்டும் போது தனது மாமியார் கையில் வைத்திருக்கும் பூ கூடையை தட்டி விடுகிறார். பின், பாக்கியாவின் மாமியார் தன்னை ஒருவர் வண்டியில் செல்லும் போது இடித்து விட்டதாக வீட்டினரிடம் கூறுகிறார்.
“பாக்கியலட்சுமி” சீரியல்
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா எப்பவும் போல டிரைவிங் கிளாஸ் செல்கிறார். அப்போது கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று பாக்கியாவின் மாமியார் மற்றும் செல்வி இருவரும் கிளம்புகின்றனர். அப்போது எதிரில் பாக்கியா வண்டியில் வருகிறார். தனது மாமியாரை பார்த்து பயந்து விடும் பாக்கியா வேகமாக சென்று விடுகிறார். அப்போது தெரியாமல் பூ கூடையினை தட்டி விடுகிறார். பாக்கியாவின் மாமியார் மற்றும் செல்வி இருவரும் இதனால் கோபம் அடைகின்றனர். பின், வீட்டில் வந்து ஜெனியிடம் தன்னை ஒரு பெண் இடித்து விட்டதாக பாக்கியாவின் மாமியார் கூறுகிறார்.
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வாடிக்கையாளரா நீங்கள் – ஆகஸ்ட் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது!
பாக்கியவிடமும் இதையே அவர் கூறுகிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். தான் ஒன்றுமே செய்யவில்லை, ஆனால் இந்த அத்தை பொய் கூறுகிறார் என்று நினைத்து கவலை அடைகிறார். பின், பாக்கியாவிற்கு போன் செய்யும் கோபி சமையல் ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று கூறிய தனது நண்பனை வீட்டிற்கு அழைத்து வருவதாக கூறுகிறார். இதனால் பாக்கியா மிகவும் சந்தோசம் அடைகிறார்.
TN Job “FB Group” Join Now
கோபியின் நண்பர் வந்ததும், பாக்கியா வீட்டினர் அவரிடம் பேசுகின்றனர். பின், அவரது நண்பர் தனது மனைவி குஜராத்தி குடும்பத்தினை சேர்ந்தவர் என்றும், அது போலவே சமைக்க வேண்டும் என்று கூறுகிறார். வீட்டினர் அனைவரும் பாக்கியா நன்றாக இது போன்ற உணவுகளை சமைப்பார் என்றும் தரமான உணவினை உங்களுக்கு சமைத்து தருவார் என்றும் கூறுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.