வண்டி ஒட்டி சென்றது பாக்கியாவா என்று சந்தேகப்படும் மாமனார் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசொட்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று பாக்கியாவின் நடவடிக்கைகளை பற்றி செல்வி அனைவரிடமும் கூறுகிறார். இன்றும் ஒரு மழுப்பலான காரணத்தை சொல்லி விட்டு பாக்கியா கிளாஸ் செல்லுகிறார்.
“பாக்கியலட்சுமி” சீரியல்
இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று, பாக்கியா தினமும் காலையிலேயே எங்கயோ கிளம்பி சென்று விடுகிறார் என்று செல்வி அனைவரிடமும் கூறுகிறார். இதனால் அனைவரும் குழப்பம் அடைகின்றனர். அதே போல் பாக்கியாவின் மாமியாருக்கு செல்வி கூறுவதை கேட்டு கோபம் வருகிறது. இனி பாக்கியவை இப்படி பேச கூடாது என்று செல்வியை எச்சரிக்கிறார். பின், பாக்கியா கிளாஸ் முடித்து விட்டு வீடு வந்ததும் அவரது மாமனார் இன்று காலை ஒரு பெண் தறிகெட்டு வண்டியினை ஒட்டி சென்றதாக அனைவரிடமும் கூறுகிறார்.
உங்கள் மொபைலில் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த சூப்பர் ஐடியா!!
அதே போல் அவர் பார்ப்பதற்கு பாக்கியாவை போலவே இருந்ததாகவும் கூறுகிறார். இதனை கேட்டு விட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். அந்த பெண் தான் இல்லை என்றும் கூறுகிறார். அவரது மாமனாரும் பாக்கியாவிற்கு தான் வண்டி ஓட்ட தெரியாது தானே பாக்கியாவை போலவே சேலை அணிந்து இருந்ததாக கூறுகிறார். பின், இரவு ஜெனி செழியனிடம் பேச முயற்சிக்கிறார். அப்போது செழியன் ஜெனியிடம் பேசுவதை தவிர்க்கிறார்.
TN Job “FB Group” Join Now
இதனால் ஜெனிக்கு என்னவோ போல் ஆகி விடுகிறது. செழியனுக்கும் தான் ஜெனியை அதிகமானாக வருத்தப்பட வைக்கிறோமோ என்று தோன்றுகிறது. இப்படியாக இருவேறு மனநிலையில் இருவரும் உறங்கி விடுகின்றனர். பின், அடுத்த நாள் பாக்கியா தனக்கு தெரிந்த ஒருவருக்கு மசாலா டெலிவரி செய்ய வேண்டும் என்று கூறி விட்டு கிளாஸ் செல்லுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது.