விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் சுசித்ரா வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவியில் “பாக்கியலட்சுமி” சீரியல் இல்லாதாரிகளின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும் இந்த சீரியலில் தற்போது நடித்து வரும் நிலையில், அவர்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் நடந்து வருகிறது. கோபி இத்தனை நாட்கள் குடும்பத்தையும் பாக்கியாவையும் ஏமாற்றி வந்த நிலையில் தற்போது கோபியின் பொய் அனைத்தும் கோபியின் அப்பா ராமமூர்த்திக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் அவரால் தற்போது உண்மையை வெளியே சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார். கோபி பாக்கியாவை விவாகரத்து செய்ய முடிவு செய்து வக்கீல் நோட்டீஸில் கையெழுத்து வாங்கிவிட்டார்.
அதனால் ராதிகா சந்தோசமாக இருக்க இது பற்றி எதுவும் தெரியாமல் பாக்கியாவும், குடும்பத்தினரும் இருக்கின்றனர். கோபியின் தந்தையின் மருத்துவ செலவை தன் தலையில் பாக்கியா சுமக்கிறார். அதற்காக ராத்திரி பகலாக பாக்கியா உழைக்கிறார். இப்படி பெண்களின் வாழ்க்கையை பற்றியே கதை செல்வதால் பல குடும்ப ரசிகர்களை இந்த சீரியல் ஈர்த்துள்ளது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்கியா கதாபாத்திரத்தில் மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடித்து வரும் சுசித்ரா, கணவன் மற்றும் குடும்பமே வாழ்கையென நினைக்கும் மனைவியாக, வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் பெண்ணாக நடிக்கிறார். அதனால் பலரது மனதை அவர் கவர்ந்து இருக்கிறார். அதனால் அவருக்கு இந்த சீரியலில் நடிக்க ஒருநாள் சம்பளமாக ரூ. 9000 வழங்கப்படுகிறது. அதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.