விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகை? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?
அனைத்து தமிழ் இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்து விரும்பி பார்க்கப்பட்டு வரும் கதைக்களத்தை கொண்ட தொடர் பாக்கியலட்சுமி. சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகப்போவதாக நேஹா இணையத்தில் பதிவு செய்த போஸ்ட் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இப்போது டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி தொடர் தான். இந்த தொடர் தமிழகத்தில் இருக்கும் அனைத்து குடும்ப பெண்களின் ஆதரவை பெற்று இந்த ஆண்டு விஜய் டெலிவிசன் அவார்ட் நிகழ்ச்சியில் அதிக வெற்றி கோப்பைகளை வென்றது. பாக்கியாவின் கதை மக்கள் மனதில் இடம் பெற்ற அளவுக்கு கோபியின் கதைக்களமும் அதிகளவில் வரவேற்கப்படுகிறது. ஏனென்றால் கோபியின் லீலைகள் எல்லாம் நகைச்சவையாகவும், மனைவி ஒரு பக்கம் காதலி ஒரு பக்கம் என இருவரையும் சமாளிக்கும் விதம் என ஸ்வாரஸ்யமாகவும், காமெடியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் மீனாவின் மகனா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
தற்போது பாக்கியலட்சுமி சீரியலுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் இணைந்து மகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பிடித்திருக்கும். அந்த வகையில் செழியனுக்கு மனைவியான ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ் சைலெண்டாக இருந்து ரசிகர்களை குவித்தவர். இவர் இப்போது விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகும் புதிய தொடரான செல்லம்மா சீரியலிலும் நடித்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தொடரில் இனியாவாக நடிக்கும் நேஹா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடன் நடிக்கும் திவ்யா கணேஷை டாக் செய்து “வி மிஸ் யூ” அக்கா என பதிவு செய்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி நேஹாவிடம் திவ்யா சீரியலில் இருந்து விலகுகிறாரா? இனி பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க மாட்டாரா? என்று கேள்விகளை அடுக்கியுள்ளனர். ஏனென்றால் இவர் புது சீரியலில் கமிட் ஆகி இருப்பதால் ரசிகர்களுக்கு இந்த போஸ்ட் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பின்னணியில் இருக்கும் உண்மை என்னவென்றால் திவ்யா படப்பிடிப்பிற்கு செல்வதால் மிஸ் யூ என்று நேஹா பதிவு செய்திருக்கிறார்.