‘நான் ஒரே ஒரு தவறு செய்து விட்டேன்’- “பாக்கியலட்சுமி” கோபி வெளியிட்ட பதிவு! இணையத்தில் வைரல்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் நான் ஒரே ஒரு தவறு தான் செய்துவிட்டேன் என சீரியலை பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி கோபி:
சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்புமுனைகளுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. கோபியின் ஆட்டம் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் அவர் எப்போது மாட்டிக் கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் கோபியாக நடித்து வரும் சதீஸ் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகைக்கு வளைகாப்பு – குவியும் வாழ்த்துக்கள்!
கோபியாக இவரை தவிர எவராலும் நடிக்க முடியாது என அவர் ஒவ்வொரு காட்சிகளிலும் நிரூபித்து இருக்கிறார். அந்த வகையில் கோபி கதாபாத்திரம் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் ஒரே ஒரு தவறு செய்துவிட்டேன். அதில் ஏற்கனவே காதலித்த பெண்ணை மீண்டும் காதலித்துவிட்டேன் அதனால் தான் கோபிக்கு இவ்வளவு கஷ்டம் என அதில் குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது தமிழக மக்களின் ஒரே ஆசையாக கோபி எப்போது சிக்குவார் என்பதே இருக்கிறது.
Exams Daily Mobile App Download
கோபியாக நடித்து வரும் சதீஸ் அவர்களின் நடிப்பு திறமையை பாராட்டும் வகையில் கோபிக்கு விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் சிறந்த வில்லனுக்கான விருது கொடுக்கப்பட்டது. மேலும் பாக்கியலட்சுமி சீரியல் குழுவிற்கும் ஏகப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். கோபியின் இந்த பதிவு சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கோபி நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் அவருடைய சாமர்த்திய நடிப்பிற்கு தனி ரசிகர் கூட்டமே இருப்பது குறிப்பிடத்தக்கது.