‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அடுத்த வார எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியாவிற்கு ராஜசேகர் என்பவரால் பெரிய சமையல் ஆர்டர் கிடைக்க இருக்கிறது. இதனால் பாக்கியா பெரிய கேட்டரிங் சர்வீஸ் வைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
“பாக்கியலட்சுமி” சீரியல்
விஜய் தொலைக்காட்சி “பாக்கியலட்சுமி” சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் ஜெனி கர்ப்பமாக இருக்கிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். ஆனால், செழியனுக்கு இந்த குழந்தை பெற்று கொள்வதில் சுத்தமாக விருப்பமில்லை. அதனை ஜெனியிடம் கூறவும் செய்கிறார்.
இதனால் கோபம் அடையும் ஜெனி யாரிடமும் கூற முடியாமல் தவிக்கிறார். பாக்கியா ஜெனி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்துகிறார். ஆனால், செழியனுக்கு பயப்படும் ஜெனி தான் வேலைக்கு செல்வதில் உறுதியாக இருக்கிறார். இப்படியாக இருக்க, பாக்கியாவிற்கு ராஜசேகர் என்பவர் மூலமாக பெரிய சமையல் ஆர்டர் கிடைக்க இருக்கிறது போல காட்டப்படுகிறது.
அகிலன் பேச்சை மீறி அஞ்சலி செய்யும் காரியம் – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இதனால் பாக்கியா பெரிய கேட்டரிங் சர்வீஸ் வைத்து நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது போல தெரிகிறது. இதுவரை பாக்கியா சின்ன சின்ன சமையல் ஆர்டர்களை மட்டுமே எடுத்து செய்து வந்தார். தற்போது 50 பேருக்கு சமைத்து கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். பாக்கியா தனது வாழ்வில் வெற்றி அடைவது போல காட்டப்படுவது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.