பாக்கியாவின் வீட்டிற்கு வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் – ராதிகாவிடம் பேச முடியாமல் தவிக்கும் கோபி!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார்கள். இரவு மூர்த்தி, கண்ணன் என அனைவரும் கோபியுடன் தூங்க வருகிறார்கள். இதனால் ராதிகாவிடம் எப்படி பேசுவது என கோபி தவிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவின் கண்ணில் மண்ணை தூவி விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோபி செய்து கொண்டிருக்கிறார். தன்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் பாக்கியாவை விட்டுவிட்டு அதிகாரம் செய்யும் ராதிகாவை தேடி செல்கிறார். தற்போதெல்லாம் இரவு நேரங்களில் கூட ராதிகாவின் வீட்டிலேயே தங்கி விட்டு காலை தான் பாக்கியாவின் வீட்டிற்குச் செல்கிறார்.
விஜய் டிவி ‘ராஜா ராணி’ சீசன் 2 நடிகை ரியாவின் காதலர் யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்!
இருப்பினும் பாக்கியாவிற்கு கோபி மீது துளி கூட சந்தேகமில்லை. கோபி காலையில் வீட்டிற்கு வந்தாலும் கூட சாப்பிடுகிறீர்களா, என கேட்டுவிட்டு அவருக்குத் தேவையான சாப்பாட்டை சமைத்து கொடுப்பார். சில நேரங்களில் ராதிகாவின் வீட்டிற்கு செல்ல முடியாத நேரத்தில் பாக்கியாவின் வீட்டில் இருந்தபடியே இரவு முழுக்க ராதிகாவிடம் போனில் பேசிக்கொண்டிருப்பார். தற்போது கூட கோபியின் அறையிலேயே தான் பாக்கியாவும் தூங்குவார் என எழில், செழியன் என அனைவரும் கூறிவிடுகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதனால் பாக்கியாவின் பக்கத்தில் படுத்துக்கொண்டே கோபி ராதிகாவிடம் தெரியாமல் போன் பேசியபடி இருப்பார். தற்போது எதற்ச்சையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பாக்கியா விருந்து வைக்கிறார். கோபியின் அறையில் தான் மூர்த்தி, கண்ணன் என அனைவரும் உறங்க வருகிறார்கள். எப்படி ராதிகாவிடம் இரவு போனில் பேசுவது என தவித்துக் கொண்டிருக்கிறார். ராதிகாவும் தொடர்ந்து கோபிக்கு போன் செய்த படியே இருக்கிறார். எப்படி ராதிகாவிடம் பேசுவது என கோபி முழிக்கும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.