கோபிக்கு தெரியாமல் பாக்கியா செய்த காரியம் – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று பாக்கியா தான் ராதிகாவின் வீட்டிற்கு சென்றதை பற்றி கூறுகிறார். இதனை கேட்டு விட்டு கோபி இனி இது போன்று செய்ய வேண்டாம் என்று திட்டி விடுகிறார்.
“பாக்கியலட்சுமி” சீரியல்:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா தான் ராதிகாவின் வீட்டிற்கு சென்று விட்டு வந்ததாக தனது மாமியார் மற்றும் கோபியிடம் தெரிவிக்கிறார். இதனை கேட்டு கோபிக்கு பயம் வந்து விடுகிறது. பின், இனி இது போன்று தொடர்ந்து ஒருவரது வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். பின், பாக்கியா தான் டிரைவிங் ஸ்கூல் சென்றதை பற்றி கூற நினைத்து பின் வேண்டாம் என்று முடிவு எடுத்து தனது வேலையை கவனிக்க சென்று விடுகிறார். பின், எழில் அம்ரிதாவின் வீட்டிற்கு சென்று விடுகிறார்.
தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 20ல் குறைதீர் கூட்டம் – அறிவிப்பு வெளியீடு!
அங்கு எழிலை எதிர்பார்க்காத அம்ரிதாவின் அப்பா டென்ஷன் அடைகிறார். அவர் எழில் மீது எரிந்து எரிந்து விழுகிறார். இதனை பார்க்கும் அம்ரிதாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. இப்படியாக இருக்க, எழிலை அம்ரிதாவின் அம்மாவிற்கு மிகவும் பிடித்து இருக்கிறது. பின், பாக்கியா ஜெனியிடம் கூறி விட்டு டிரைவிங் ஸ்கூலில் சேருவதற்காக செல்லுகிறார். பின், போட்டோ கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் ஸ்டூடியோ செல்கிறார்.
TN Job “FB Group” Join Now
அங்கு பாக்கியாவிற்கு ஒரு போஸ் கொடுக்க தெரியாத காரணத்தால் போட்டோகிராபர் கோபம் அடைந்து திட்டி விடுகிறார். பின், ஒரு வழியாக போட்டோ எடுத்து விட்டு டிரைவிங் ஸ்கூலிற்கு செல்லுகிறார். அங்கு 4000 ரூபாய் பணத்தினை கட்டியும் விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.