கோபி பற்றி உண்மையை தெரிந்து கொண்ட செழியன் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்ய நினைக்கிறார். இந்த விஷயம் குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே தெரியும் நிலையில் தற்போது மூன்றாவதாக செழியனுக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது.
பாக்கியலட்சுமி:
“பாக்கியலட்சுமி” சீரியலில் நடைமுறை வாழ்க்கையை கதையாக எடுப்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கோபி மீது குடும்பத்தில் அனைவரும் மரியாதையும் பாசமும் வைத்திருக்க ஆனால் கோபி தன்னுடைய சுயநலத்திற்காக தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்ய நினைக்கிறார். அதனால் தன்னுடைய குடும்பத்தையும் பாக்கியாவையும் ஏமாற்றி ராதிகாவுடன் பழகி வர இந்த விஷயம் முதலில் எழிலிற்கு தெரிய வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் எழில் காதலிக்கும் நடிகை இவரா? நெட்டிசன்கள் கேள்வி! ரசிகர்கள் ஷாக்!
ஆனால் எழில் அப்பாவை எச்சரித்ததோடு நிறுத்திக் கொள்கிறார். அம்மாவிற்கு இந்த விஷயம் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் அதை சொல்லாமல் இருக்கிறார். அடுத்ததாக கோபியின் தந்தை ராமமூர்த்திக்கு உண்மை தெரிய வருகிறது. ராதிகா தான் கோபி பழகும் பெண் என்பது வரை அவருக்கு தெரியும் அவர் பல முறை எச்சரித்தும் கூட கோபி திருந்துவதாக இல்லை அதனால் ராம்மூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.
Exams Daily Mobile App Download
அவர் பேசமுடியாமல் இருக்கிறார். இந்நிலையில் பாக்கியாவின் தோழி செல்வி ஒரு முறை கோபியை வேறு பெண்ணுடன் பார்த்துவிடுகிறார். ஆனால் அதை பாக்கியா நம்பவில்லை. இந்நிலையில் தற்போது குடும்பத்தில் மற்றொருவருக்கு உண்மை தெரியவருகிறது. அதாவது செழியனிற்கு உண்மை தெரிய வர அவர் கோவமாக கோபியிடம் இது பற்றி கேட்கிறார். தாத்தா சொன்னது எல்லாம் உண்மையா என கேட்க கோபிக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. இவை எல்லாம் அடுத்து வர போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.