மயூவுடன் கோபியை பார்த்து வருத்தத்தில் இனியா.. பாசத்துடன் கோபி! – தடுத்து விடும் ராதிகா!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ள நிலையில், கோபியை பார்த்து இனியா வருத்தப்படுவது போலான காட்சிகள் வர உள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மற்றும் கோபியின் திருமணம் முடிந்த பிறகு, கதையின் திசை மாறியுள்ளது. பாக்கியா ஒருபக்கம் தொழிலில் முன்னேறுவது போலவும், கோபி 1 வேளை வீட்டு சாப்பாட்டிற்கே அல்லல் படுவது போலவும் காட்சிகள் வருகிறது. இந்நிலையில், இனிய மற்றும் மயூ ஸ்கூலில் பேரண்ட்ஸ் மீட்டிங் இருப்பதால், அனைவரும் செல்கின்றனர். அங்கு அனைவரின் அப்பாவும் வந்திருக்க இனியாவிற்கு அப்பாவின் நியாபகம் வந்து விடுகிறது.
அயப்பாக்கம் ஊராட்சி மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் – விரைவில் புதிய திட்டம்!
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
அப்போது, பார்த்து கோபி மயூவோடு வருகிறார். இதைப்பார்த்த இனியாவிற்கு அழுகையாக வருகிறது. அலுத்து கொண்டே அங்கிருந்து வருகிறார். மயூவின் ஆசிரியர் கோபியை பார்த்து இது தான் உன் அப்பாவா என்று கேட்கிறார். அதற்கு ராதிகா, பேச்சை மாற்றி சொல்ல வேண்டியதை சொல்லுங்கள் என்று கேட்கிறார். பேசி முடித்து வெளியே வந்ததும், இனியா அழுவதை பார்த்து கோபி சமாதானம் செய்ய செல்கிறார். அப்போது, ராதிகா கோபியை தடுத்து விடுகிறார். இதைப்பார்த்த இனியா மேலும் அழுது கொண்டே செல்கிறார்.