அப்பா செத்தாலும் ராதிகா தான் முக்கியம் என்று கல்யாணத்தை செய்யும் கோபி – பாக்கியலட்சுமி அதிரடி ட்விஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி பட்டியலில் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைக்கும் வகையில் பல அதிரடியான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கோபி மற்றும் ராதிகாவின் திருமணம் குறித்த அதிரடி ட்விஸ்ட் இனி வர உள்ளது.
கோபி – ராதிகா திருமணம்:
தனது அப்பாவின் கட்டாயத்தின் காரணமாக சிறு வயதில் பாக்கியாவை திருமணம் செய்து பிடிக்காத வாழ்க்கையை 25 வருடமாக வாழ்ந்து வருகிறார் கோபி. ஆனால் திடீரென்று தனது கல்லூரி காதலி ராதிகாவை சந்தித்து, அவரையே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் கோபி. தனது குடும்பத்திற்கு தெரியாமல் ராதிகாவை சந்தித்து தனது உறவை வளர்க்கும் கோபி, ஒரு கட்டத்தில் பாக்கியாவிற்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்கிறார்.
ஆரம்பத்தில் கோபியின் திட்டம் எதுவும் தெரியாமல் பாக்கியா மிகவும் வெகுளியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் கோபி செய்யும் அனைத்து தில்லு முல்லு வேலைகளையும் பாக்கியா கண்டுபிடிக்கிறார். இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். இது தான் நமக்கு சரியான வாய்ப்பு என்று கோபி, ராதிகாவுடன் திருமண ஏற்பாடுகளை ஆரம்பிக்கிறார்.
திருமணத்தை நிறுத்த துணிந்த பாக்கியா.. காலில் விழுந்து கதறும் கோபி – பாக்கியலட்சுமி அசத்தல் அப்டேட்!
Exams Daily Mobile App Download
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, கோபி மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கான சமையல் ஆர்டர் பாக்கியாவிற்கு ஒரு நிறுவனம் மூலமாக கிடைக்கிறது. இறுதியாக, திருமண நாளும் வந்து விட்ட நிலையில், பாக்கியா திருமண மணடபத்திற்கு வருகிறார். அங்கு, சந்துரு மற்றும் ராதிகாவின் அம்மா ஆகியோரை பார்க்கிறார். ஆனால், இவர்களுக்கு முன்னதாக அறிமுகம் இல்லாததால் அடையாளம் தெரியவில்லை. இறுதியாக, ராமமூர்த்தி தாத்தா,”கோபியிடம் நீ ராதிகாவை திருமணம் செய்து கொண்டால் நா செத்து விடுவேன்” என்று மிரட்டுகிறார். ஆனால், கோபி” நீங்க செத்தாலும் எனக்கு கவலை இல்லை, ராதிகா தான் எனக்கு முக்கியம்” என்று கூறிவிடுகிறார். ஆக மொத்தம் இனி வரும் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடுகளில் விறுவிறுப்புக்கு மட்டும் பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்