இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்டிய பாக்கியா, வாயடைத்து போன குடும்பம் – முக்கிய ட்விஸ்டுகளுடன் ‘பாக்கியலட்சுமி’!

0
இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்டிய பாக்கியா, வாயடைத்து போன குடும்பம் - முக்கிய ட்விஸ்டுகளுடன் 'பாக்கியலட்சுமி'!
இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்டிய பாக்கியா, வாயடைத்து போன குடும்பம் - முக்கிய ட்விஸ்டுகளுடன் 'பாக்கியலட்சுமி'!
இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்டிய பாக்கியா, வாயடைத்து போன குடும்பம் – முக்கிய ட்விஸ்டுகளுடன் ‘பாக்கியலட்சுமி’!

ஏற்கனவே ஒருமுறை பாக்கியா தான் இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்டினார். ஆனால், யாருக்கும் சொல்ல வேண்டாம் என பாக்கியா கோபியை தடுத்துவிட்டார். இந்நிலையில், தற்போது இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்டியது பாக்கியா தான் என்பது குடும்பத்தினர்கள் அனைவர்க்கும் தெரியவரும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை வீட்டை விட்டு விரட்டியதை வைத்தே பாக்கியாவை குடும்பத்தினர்கள் திட்டி கொண்டிருக்கின்றனர். இதற்கு நடுவே இனியாவும் வந்து எனக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என கூறுகிறார். என்ன திடீரென இப்படி கூறுகிறாய் என பாக்கியா இனியாவிடம் கேட்க, உடனே இனியா இதுவே அப்பாவாக இருந்தால் சரியான நேரத்தில் ஸ்கூல் பீஸ் கட்டியிருப்பார் என கூறுகிறார். அப்பாவை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என பாக்கியா மீது இனியா மிகவும் கோவப்படுகிறார்.

தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு – அறிவிப்பு வெளியீடு!

ஆனாலும், பாக்கியா அனைத்தையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார். மேலும், பாக்கியாவின் நிலைமையை புரிந்துகொள்ளாமல் ஈஸ்வரி மற்றும் செழியனும் பாக்கியாவை திட்டி கொண்டிருக்கின்றனர். என்ன தான் இருந்தாலும் கோபியை பொறுத்துக்கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும் என்பது போல பேசி கொண்டிருக்கின்றனர். இதற்கு நடுவே ஜெனி செழியனிடம் உன்னிடம் தான் காசு இருக்கிறதல்லவா, நீ இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்டு என கூறுகிறார். உடனே, செழியன் கோவப்பட்டு நான் எதற்காக கட்ட வேண்டும் அம்மா தான் அப்பாவுடன் சண்டைபோட்டு குடும்பத்தின் செலவுகளை பார்த்துக்கொள்கிறேன் என கூறினார்.

Exams Daily Mobile App Download

இதனால், அவரே அனைத்தையும் பார்த்துக்கொள்ளட்டும் என கூறிவிடுகிறார். ஆனால், உண்மையில் பாக்கியா தான் சில மாதங்களாக குடும்பத்தின் அனைத்து செலவுகளையும் கவனித்து கொண்டிருக்கிறார். கோபி வேலைக்கு செல்லாமல் ராதிகாவுடனையே சுற்றி கொண்டிருந்ததால் காசு எதுவும் வீட்டிற்கு கொடுக்கவில்லை. கடந்த முறை கூட இனியாவின் ஸ்கூல் பீஸையும் பாக்கியா தான் கட்டினார். ஆனால், அதை யாரிடமும் கூறவேண்டாம் என பாக்கியா கூறியதால் தான் இனியா இப்படி பேசி கொண்டிருக்கிறார். இந்நிலையில், பாக்கியா தான் கடந்த முறை ஸ்கூல் பீஸ் கட்டியது என இனியா அறிந்துகொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!