கோபி திருமணத்தில் வேலைக்காரியாக மாறிய பாக்கியா – ராதிகா குடும்பம் செய்யும் கொடுமை!
பாக்கியலட்சுமி தொடரில் கோபி ராதிகா திருமணத்தில், பாக்கியா தான் சமைக்க போகிறார். அது சம்மந்தப்பட்டு அடுத்து டெலிகாஸ்ட் செய்யப்படும் எபிசோடுகள் குறித்த அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
பாக்கியலட்சுமி தொடர்:
கோபி வீட்டை விட்டு வெளியேறிய பின் மொத்த குடும்ப செலவுகளும் பாக்கியா தலையில் தான் விழுகிறது. மறுபுறம் ஈஸ்வரி, இனியா, செழியன் என அனைவரும் பாக்கியாவை தான் கோபி செய்த தவறுக்கு குறை கூறுகின்றனர். அத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் பாக்கியா பெரிய திருமண சமையல் ஆர்டர் ஒன்றை எடுக்கிறார்.
ஆலியா மானசா சன் டிவியின் இந்த சீரியலில் தான் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளாரா? தீயாய் பரவும் தகவல்!
அது கோபி ராதிகாவின் திருமணம் என்று தெரிந்த பின்னரும் அந்த திருமணத்தில் சமைக்க ஒப்புக்கொள்கிறார். மேலும் கோபியிடமே சென்று தயவு செய்து அந்த திருமணத்தை நிறுத்தாதீர்கள் என கேக்க கோபி குழம்பி போகிறார். மேலும் ராதிகாவின் மாஜி கணவர் ராஜேஷ் வேறு ஈஸ்வரி வீட்டிற்கு சென்று திருமணத்தை பற்றி அறிந்து சண்டை போடுகிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது அடுத்து வரும் எபிசோடுகள் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. அதில் கோபி ராதிகா திருமணத்தில், பாக்கியா இழுத்து போட்டு ஒரு வேலைக்காரி போல அனைத்து வேலைகளையும் செய்கிறார். கோபிக்கு ஒரு பக்கம் பாக்கியாவை பார்க்க கடுப்பாக இருந்தாலும் ராதிகாவிற்காக பல்லை கடித்து கொண்டுள்ளார். இந்த எபிசோடுகள் இனி காட்டப்பட உள்ளன.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்