கோபியை ராதிகாவுக்கு விட்டு கொடுக்கும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!
கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் தற்போது தான் பாக்கியாவிற்கு தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், கோபியை ராதிகாவுடனையே செல்ல பாக்கியா அனுமதிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு தெரிந்துவிட்டது. ஆரம்பத்தில் பாக்கியாவிற்கு மட்டும் தான் கோபியை பற்றிய உண்மைகள் தெரியாமல் இருந்தது. ஆனால், தற்போது பாக்கியாவிற்கும் உண்மைகள் அனைத்தும் தெரியவந்து கோபியின் உண்மையான முகம் வெளியே வந்துவிட்டது. இத்தனை நாள் வரைக்கும் கோபி மீது பாக்கியா அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், தற்போது மொத்த நம்பிக்கையும் சுக்கு நூறாகிவிட்டது.
Exams Daily Mobile App Download
அதாவது, கோபிக்கு ஆக்சிடன்ட் ஆகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது ராதிகா மற்றும் பாக்கியா இருவருக்குமே கால் வருகிறது. அதாவது, இருவரிடமும் உங்களது கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் உடனே வாருங்கள் என கூறுகிறார்கள். இதனால் இருவருமே கோபியை பார்க்க ஓடி வருகின்றனர். அப்போது கோபியை பார்க்க ராதிகா உள்ளே செல்வதை பாக்கியா பார்த்துவிடுகிறார். இந்நிலையில், கோபி ராதிகாவின் கையை பிடித்து நீ இல்லாமல் என்னால் உயிரோடு இருக்கவே முடியாது எனக்கு நீ மிகவும் முக்கியம் என கூறி கெஞ்சுகிறார்.
இதனை பார்த்த பாக்கியாவிற்கு தூக்கிவாரி போட்டுவிட்டது. பாக்கியாவாலேயே அதனை நம்ப முடியவில்லை. இதற்கு பிறகு தான் ராதிகா வரும்போதெல்லாம் கோபி பயந்த அனைத்து விஷயங்களையும் நினைத்து பார்க்கிறார் மற்றும் கோபி ஏன் நம்மை பிடிக்கவில்லை என அடிக்கடி கூறினார் என்பதும் புரிய வருகிறது. மேலும், இத்தனை நாட்களும் கோபி ஏமாற்றி கொண்டு தான் இருந்தார் என்பதும் தற்போது தான் பாக்கியாவிற்கு புரியவருகிறது. இந்நிலையில், கோபி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் போது உங்களுக்கு ராதிகா தானே முக்கியம் அவருடனையே சென்று விடுங்கள் என கோவமாக கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.