கோபி பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு தற்கொலைக்கு முயலும் பாக்கியா? சீரியலில் புதிய திருப்பம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி மற்றும் ராதிகாவின் ரகசிய காதல் குறித்த விஷயங்களை அறிந்து கொண்ட பாக்கியா ஒரு அதிரடியான முடிவு எடுப்பது போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பாக்கியலட்சுமி சீரியல்
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் ஒரு முக்கியமான கட்டத்திற்கு ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களம் வந்திருக்கிறது. அந்த வகையில், இந்த சீரியலில் கோபி, ராதிகாவை காதலிக்க துவங்கியதில் இருந்து அவர் எப்போது மாட்டிக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், ஒவ்வொரு தருணமும் ஏதாவதொரு பொய்யை சொல்லி பாக்கியா மற்றும் ராதிகாவிடம் இருந்து தப்பித்து வந்தார் கோபி. இந்த நிலையில் கடந்த ஒரு சில வாரமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் இடம்பிடித்திருந்தது.
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – ஜூலை 16 வரை கால அவகாசம்!
அதாவது, தவளை தன் வாயால் கெடும் என்பது போல கோபி குடித்து விட்டு வந்து பாக்கியா பற்றிய உண்மைகளை ராதிகாவிடம் உளறி வைக்கிறார். இந்த உண்மையை அறிந்து கொள்ளும் ராதிகா அவரை வெறுக்க ஆரம்பிக்கிறார். தொடர்ந்து பாக்கியாவுக்கு துரோகம் செய்ய விரும்பாத ராதிகா மும்பைக்கு குடியேற திட்டமிடுக்கிறார். இந்த பரபரப்பான சூழலில் ஒருவரும் எதிர்பார்த்திராமல் ராஜேஷ் மூலமாக கோபி பற்றிய உண்மைகள் அவரது வீட்டிற்கு தெரிய வருகிறது.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து கோபிக்கு விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, அங்கு வரும் பாக்கியா, கோபி மற்றும் ராதிகாவின் உறவை பற்றி தெரிந்து கொள்கிறார். இந்த உண்மையை தெரிந்து கொண்டதும் பாக்கியா நிலைகுழைந்து போகிறார். இப்போது கோபியை சந்திக்காமல் மருத்துவமனையில் இருந்து கிளம்பும் பாக்கியா கொட்டும் மழையிலும் தன்னிலை மறந்தவராக நடுரோட்டில் நடந்து வருகிறார். இதற்கு பிறகு, கோபிக்கு எதிராக பாக்கியா என்ன நடவடிக்கை எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் பாக்கியா தற்கொலைக்கு முயலுவது போல அடுத்தகட்ட கதைக்களம் அமைய இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகியுள்ளது.