கோபியை வீட்டை விட்டு வெளியேற சொன்ன பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியின் ஏமாற்று வேலைகள் எல்லாம் தெரிந்த பின் பாக்கியா கோபியை பிரிய முடிவு செய்கிறார். இந்நிலையில் கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல, அதனால் கோவப்பட்ட பாக்கியா கோபியை பயங்கரமாக திட்டுகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் பல சுவாரசியமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை அப்பாவியாக இருந்த பாக்கியா இனிமேல் சூறாவளியாக மாற இருக்கிறார். குடும்பம், கணவன், குழந்தைகள் என வாழ்ந்த பாக்கியா இப்போது சுயநலமாக யோசித்து கோபியை பிரிய முடிவு செய்து இருக்கிறார். அதனால் குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைய, கோபி பாக்கியாவின் முடிவை பார்த்து கோபப்படுகிறார். பின் இனிமேல் இந்த வீட்டில் பாக்கியா இருக்க கூடாது என சொல்கிறார்.
இனியாவும் குடும்பத்தினரும் பலமுறை கெஞ்சியும் பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். கோபி இந்த வீட்டில் இருக்கும் அனைத்தும் நான் சம்பாரித்தது நீ இந்த வீட்டில் இருக்காதே, நீ இத்தனை ஆண்டுகளாக செய்த வேலையை வேலைக்காரி கூட செய்வாள் என சொல்ல இதற்கு மேல் தன்மானம் தான் முக்கியம் என பாக்கியா வீட்டை விட்டு கிளம்புகிறார். ஆனால் அதில் பெரிய திருப்பமாக பாக்கியா தன்னுடைய உடைகளை எடுத்து வரமால் கோபி உடைகளை எடுக்க இருக்கிறார்.
கோபியை விட்டு மொத்தமாக விலகிய பாக்கியா, பரிதவிக்கும் குடும்பத்தினர் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
Exams Daily Mobile App Download
அதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைய எல்லா தவறும் செய்த நீ இங்கே இருக்க வேண்டும். நான் எதற்கு வெளியே போக வேண்டும் என கேள்வி கேட்கிறார். பாக்கியா இப்படி பேச அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நீ ஒரு ஆம்பளையாக இருந்தால் இந்த வீட்டை விட்டு வெளியே போ என பாக்கியா சொல்ல, இது தான் சரியான முடிவு என எழில் ஆதரவாக இருக்கிறார். தாத்தாவும் இதற்கு ஆதரவாக இருக்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.