கோபியை கண்டபடி கேள்வி கேட்டு வெளுத்து வாங்கும் பாக்கியா, ஆதரவளிக்கும் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!
கோபியை பற்றிய உண்மைகள் அனைத்தும் பாக்கியாவிற்கு தெரிய வந்ததும் கோபியை கேள்வி கேட்டு பாக்கியா சாவடிக்கிறார். மேலும், பாக்கியாவிற்கு உண்மை தெரிந்துவிட்டதோ என கோபி பயப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் உண்மை முகம் பாக்கியாவிற்கு தெரிந்துவிட்டது. இதற்கு பிறகு கோபிக்காக ராதிகாவுடன் கோபியை சேர்த்து வைக்க போகிறாரா அல்லது கோபியை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு ராமமூர்த்தி தாத்தா மற்றும் ஈஸ்வரியை பாக்கியா கவனித்துக்கொள்ள போகிறாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், கோபி சரியாகி மீண்டும் வீட்டிற்கு வருகிறார். மேலும், பாக்கியாவிற்கு அனைத்து உண்மைகளும் தெரிந்துவிட்டது என்பது கோபிக்கு தெரியாது.
Exams Daily Mobile App Download
இனிமேலும் வேஷம் போடலாம் என வந்த கோபியை பாக்கியா கண்டபடி கேள்விகேட்டு மிரள வைக்கிறார். அதாவது, ராஜேஷ் கோபியை பற்றி கூறிய விஷயத்தை பற்றி இப்பொழுதே கோபியிடம் கேட்க வேண்டும் என பாக்கியா நிற்கிறார். ஆனால் ஈஸ்வரி, கோபி இப்பொழுது தான் மருத்துவமனையில் இருந்து வந்திருக்கிறான். சரியான பிறகு எதுவாக இருந்தாலும் கேட்கலாம் என ஈஸ்வரி கூறுகிறார். ஆனாலும், பாக்கியா விடாமல் டாக்டர் தான் இவருக்கு எதுவும் இல்லையென்று கூறிவிட்டாரே. சின்ன மயக்கம் தான் வேறு எந்த பிரச்சனையும் இல்லையென்று கூறி விட்டார் என கூறுகிறார்.
இதன் பின்பு தான் கோபிக்கு பயம் வருகிறது. அதாவது, மருத்துவர் சொன்னது அனைத்துமே பாக்கியாவிற்கு தெரிந்திருக்கிறது என்றால் கண்டிப்பாக பாக்கியா மருத்துவமனைக்கு வந்திருக்க வேண்டும் மற்றும் ஏதோ ஒன்றை பாக்கியா பார்த்திருக்க வேண்டும். அதனால் தான் பாக்கியா நம்மை பார்க்காமல் திரும்பி போயிருக்க வேண்டும் என நினைக்கிறார். மேலும், பாக்கியாவிற்கு அனைத்து உண்மையும் தெரிந்துவிட்டதா என கோபி நடுக்குகிறார். பின்பு, எதுவுமே தெரியாதது போலவே நீயும் மருத்துவமனைக்கு வந்தியா என கேட்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.