அருமையாக பாட்டு பாடி அசத்திய பாக்கியா, கை தட்டி ரசித்த கோபி – “பாக்கியலட்சுமி” ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவும் ஹனிமூன் சென்றிருக்க, அங்கே பாக்கியா மூர்த்தி குடும்பத்தை பார்த்துவிடுகின்றனர். இந்நிலையில் கோபி முன்னிலையில், பாக்கியா சந்தோசமாக இருக்க அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
“பாக்கியலட்சுமி” சீரியல் தற்போது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” உடன் இணைக்கப்பட்டு மகா சங்கமம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் கோபி ராதிகாவின் திருமணம் பற்றி தெரிந்து மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். அவருக்கு கோபி மீது பயங்கர கோவம் வர, ஆனால் பாக்கியா எதுவும் செய்ய வேண்டாம் என சொல்லிவிடுகிறார். இந்நிலையில் பாக்கியாவை குடும்பத்துடன் பார்க்க கூடாது என்பதால், ராதிகா வேற ஹோட்டல் பார்க்க சொல்கிறார். மறுபக்கம் பாக்கியாவும் வேற ஹோட்டல் பார்க்க சொல்ல, மீண்டும் அனைவரும் ஒரே ஹோட்டலில் தங்குகின்றனர்.
முதல் ஆளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போட்டியாளர் இவரா? ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் ஹோட்டலில் பாக்கியாவை சந்தோசமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதால் மூர்த்தியும் எழிலும் பாட்டு பாடி சந்தோஷப்படுத்த, பாக்கியா அனைவரையும் பார்த்து தன்னுடைய கஷ்டத்தை எல்லாம் மறந்துவிடுகிறார். மூர்த்தி, கண்ணன் எழில், இனியா, ஐஸ்வர்யா என அனைவரும் நடனம் ஆடி சந்தோசமாக இருக்கின்றனர். அப்போது ராதிகாவும் கோபியும் ரூமில் இருந்து வெளியே வந்து ஆடல் பாடல் நடக்கும் இடத்திற்கு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அப்போது அனைவரும் சேர்ந்து பாக்கியாவை பாட சொல்கிறார்கள். கோபி அதை பார்த்து கழுதை போல கத்த போவதாக நினைக்கிறார். ஆனால் மைக்கை வாங்கிய பாக்கியா அருமையான குரலில் பாடல் பாடுகிறார். அவருடைய பாடலை கேட்டு கோபி ரசித்து கேட்டு கை தட்டிவிட, அதை பார்த்து ராதிகா என் முன்னாடியே டீச்சரை ரசித்து பார்க்கிறீர்கள் என கோவப்படுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் பாக்கியாவின் அருமை இனி கோபிக்கு தெரிய வரும் என்பதில் சந்தேகமில்லை.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்