உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – பஜ்ரங் பூனியா விலகல்! காயத்தால் அவதி!
கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி முடிவுற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வீரர் பஜ்ரங் பூனியா உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மல்யுத்த போட்டிகள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி 1 தங்கப்பதக்கத்துடன் 7 விருதுகளை பெற்று சாதனை படைத்திருந்தது. இந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த பிரிவில் கலந்து கொண்ட இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். இந்த போட்டிகளின் போது அவரது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.
தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் நடைபெற உள்ளது. தற்போது முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் பஜ்ரங் பூனியா இப்போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘கடந்த ஜூன் மாதம் முழங்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவு காயத்தினால் அவதிப்பட்டு வருகிறேன்.
TN Job “FB Group” Join Now
இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதை சரி செய்வதற்காக 6 வாரங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் என்னால் கலந்து கொள்ள முடியாது. இந்த ஆண்டில் சாம்பியன்ஷிப் போட்டிகளை தவிர வேறு முக்கிய போட்டிகள் இல்லை. ஒலிம்பிக் போட்டிகளில் முழங்கால் காயத்துடன் தான் பதக்கம் வென்றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.