Tokyo Olympics Wrestling 2020 : இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி!
டோக்கியோவில் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்:
உலகளவில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ல் தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு இந்தியாவிற்கு இதுவரை 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ள. அதனால் இந்திய அணி ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 65 ஆவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இணையம் மூலம் வேலை தேடுவோர் கவனத்திற்கு – சைபர் கிரைம் எச்சரிக்கை!
இந்நிலையில் இன்று ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் முதல் ஆட்டத்தில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த எர்னாசரையும், காலிறுதியில் ஈரானின் மொர்டசாவையும் எதிர்கொண்டார் பஜ்ரங் புனியா. இரு ஆட்டங்களிலும் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். அரை இறுதிபோட்டியில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற, மூன்று முறை உலக சாம்பியனான அஜர்பைஜானைச் சேர்ந்த ஹாஜி அலியேவை எதிர்கொண்டார் பஜ்ரங் புனியா.
TN Job “FB Group” Join Now
சிறப்பாக விளையாடி ஆரம்பத்தில் முதல் புள்ளியை எடுத்தார் பஜ்ரங் புனியா. அதன் பின்னர் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய ஹாஜி அலியேவ், தொடர்ச்சியாக புள்ளிகளை சேர்த்தார். முதல் பாதியில் 4-1 என முன்னிலை வகித்தார். இதன் பிறகு பஜ்ரங் புனியா போராடி சில புள்ளிகளை எடுத்தார். எனினும் இறுதியில் 11-5 என்கிற புள்ளிக்கணக்கில் பஜ்ரங் புனியாவை ஹாஜி அலியேவ் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதற்கு அடுத்து பஜ்ரங் புனியா வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்க உள்ளார்.