Tokyo Olympics Wrestling 2020 : வெண்கலப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவை சேர்ந்த பஜ்ரங் புனியா, டவுலட் நியாஸ்பேகோவ் என்பவரை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
மல்யுத்த போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் இறுதி நாளுக்கான போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை துவங்கிய ஃகோல்ப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவினார். இதையடுத்து மாலை 3.55 மணியளவில் துவங்கிய ஆண்களுக்கான மல்யுத்த போட்டியின் முடிவு சற்று முன்பு வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 8ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தை மேற்கொண்டார். இந்த ஆட்டத்தில் தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்திய அவர் இந்தியாவுக்கான மற்றுமொரு வெண்கல பதக்கத்தை பெற்று தந்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று முறை பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ஒலிம்பிக் போட்டியில் டவுலட் நியாஸ்பேகோவ் என்பவரை தோற்கடித்து பதக்கத்தை பெற்றுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு வினேஷ் போகட், அன்ஷு போகட், தீபக் புனியா, சோனம் மாலிக், ரவிக்குமார், சீமா பிஸ்லா மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய மல்யுத்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பஜ்ரங் புனியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளதன் மூலம் ஒலிம்பிக்கில் ஆறாவது பதக்கம் பெற்ற இந்திய மல்யுத்த வீரராக தற்போது வாழ்த்துக்களை பெற்று வருகிறார். இதை தொடர்ந்து ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வெற்றி பதக்கம் கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டு இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.