ராதிகா வீட்டில் அதகளம் செய்யும் ராமமூர்த்தி.. வசமாக சிக்கிய கோபி – பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!
பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி தாத்தாவை வைத்து தான் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பது வழக்கம். அதேபோல், இந்த முறையும் சூப்பர் சம்பவம் ஒன்று நடக்க உள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா திருமணம் முடிந்த பிறகு கதை சற்று வித்தியாசமாக சென்று கொண்டிருக்கிறது. பாக்கியா எதை பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக முடிவெடுக்க பழகி உள்ளார். இந்நிலையில், இனியா ராதிகா வீட்டிற்கு சென்றதை போல் தாத்தாவும் ராதிகா வீட்டிற்கு சென்று விட்டார். ராமமூர்த்தி தாத்தா வீட்டிற்கு வந்ததை நினைத்து ராதிகா பயத்தில் இருக்க, கோபி தான் அவரை சமாதானம் செய்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் மற்றொரு நாயகி? காரணம் இதுவா – ஷாக்கில் ரசிகர்கள்!
Exams Daily Mobile App Download
தாத்தாவும், இனியாவும் கேரம் விளையாடுவதை மயூ பார்த்துக் கொண்டு நிற்க, மயூவையும் தாத்தா விளையாட அழைத்து கொள்கிறார். அங்கு டான் ஆக இருந்த கோபி, இங்கு வீட்டுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்களை வாங்குவதை பார்த்து கிண்டல் செய்கிறார். பின்னர், ராதிகாவிடம் லன்ச் டைம் ஆகிவிட்டது. குழந்தைகளுக்கு பசிக்கும். அதனால் நீ பாக்கியாவை போல் செமையாக சமைத்து எங்க அப்பாவை அசத்திவிடு என்று சொல்லுகிறார். அப்போது, ஹாலில் இருந்து பசிக்குது என்று ராமமூர்த்தி தாத்தா சத்தம் போட தொடங்குகிறார். இதனால் ராதிகா கோபியை முறைத்துக் கொண்டே செல்கிறார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.இப்பொழுதே இந்த கதி என்றால் போக போக கோபியின் நிலைமை இன்னும் மோசமாக தான் ஆகப்போகிறது.