வசமாக மாட்டிக் கொண்ட இனியா.. கோவத்தில் வெடித்த பாக்கியா – பாக்கியலட்சுமி இன்றைய ப்ரோமோ!
இனியா செல்போன் பயன்படுத்தி ஸ்கூலில் மாட்டிக் கொண்ட விஷயம் பாக்கியாவிற்கு தெரிந்து விடுகிறது. இதனால் பாக்கியா இனியா மீது கடும் கோவமாக இருக்கிறார்.
இன்றைய ப்ரோமோ:
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா ஸ்கூலில் செய்த சேட்டையின் காரணமாக வீட்டில் இருந்து அம்மா, அப்பாவை கூட்டி வர சொல்லுகின்றனர். ஆனால், பாக்கியா உட்பட வீட்டில் யாரிடம் செல்போன் விஷயத்தை கூறினாலும், தன்னை ஒரு வழி ஆக்கி விடுவார்கள் என்றும் பெரிய பிரச்சனை ஆகி விடும் என்று பயந்து கொண்டு கோபியை கால் செய்து ஸ்கூலிற்கு அழைத்து செல்கிறார் இனியா.
Exams Daily Mobile App Download
ஆனால், இனியாவின் ஸ்கூலிற்கு வந்த பாக்கியாவிடம் இதைப்பற்றி பள்ளியின் HM சொல்லி விடுகிறார். இதனால் பாக்கியா கோவமாக இனியாவிடம் வருகிறார். பாக்கியாவை பார்த்து இனியா எதுக்கு மா ஸ்கூலுக்கு வந்த? என்று கேட்கிறார். பாக்கியாவின் கோவத்தை பார்த்தே எல்லா விஷயமும் பாக்கியாவிற்கு தெரிந்து விட்டது என்று இனியா பயப்படுகிறார்.
பாரதி கண்ணம்மா சீசன் 2க்கு இப்போதே அடி போட்ட வெண்பா.. அப்போ இதுக்கு ஒரு எண்டே இல்லையா!
Follow our Instagram for more Latest Updates
உடனே, அதனை சமாளிக்க இனியா ஏதோ சொல்ல ஆரம்பிக்க, இங்க எதுவும் பேச வேணாம், வீட்டுக்கு வா என்று சொல்லி பாக்கியா கோவமாக சொல்லுகிறார். இதனால், இன்று பாக்கியலட்சுமி தொடரில் என்ன ரணகளம் நடக்க போகிறது என பொறுத்து இருந்து பார்க்கலாம்.