ராஜேஷ் பிரச்சனையை சாதகமாக பயன்படுத்தும் கோபி, ஜெனியை நினைத்து கவலைப்படும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” சீரியல்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராஜேஷ் சண்டை போட்ட பின்னர் கோபி அங்கே வந்து மயூராவை சமாதானம் செய்கிறார். மயூரா அவரது டாடி ஸ்கூலுக்கு வந்து பேசிய விஷயத்தை சொல்கிறாள். பாக்கியா ஜெனியை பற்றி செழியனிடம் கேட்கிறார்.
“பாக்கியலட்சுமி”
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா ரோட்டில் சண்டை போட்டதை நினைத்து பார்த்து பாக்கியா இனிமேல் வீட்டிலேயே பேசிப்போம் என்று நினைக்கிறார். பின்னர் கோபி ராதிகாவின் வீட்டிற்கு சென்று ராஜேஷ் வந்தது தெரியாதது போல கேட்கிறார். மயூரா ராஜேஷ் வந்ததை நினைத்து பயத்தில் இருக்க கோபி தைரியம் சொல்கிறார். மயூரா ராஜேஷ் ஸ்கூலில் இருந்து ராஜேஷ் வந்து பார்த்த விஷயத்தை சொல்கிறார்.
அதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகிறார். கோபி நான் இருக்கிறேன் நீங்க கவலைப்படாதீங்க வேணும்னா உன் பிரண்ட் பாக்கியா வீட்டிற்கு கொஞ்ச நேரம் போய் இருந்துட்டு வாங்க என்று கூறி போன் செய்ய சொல்கிறார். பாக்கியாவிற்கு போன் செய்ய கோபி சொன்னதை நினைத்து தனக்கு வேலை இருப்பதாக கூறி புறக்கணிக்கிறார். பின் செழியன் டீ வேண்டும் என பாக்கியாவிடம் கேட்கிறார்.
பாக்கியா டீ போட இங்கேயே அமர்ந்து குடிக்க சொல்கிறார். பாக்கியா செழியனிடம் ஜெனி ஏன் அவள் வீட்டிற்கு போனால் என்று கேட்க , செழியன் கோவப்பட்டு அவ அங்கையே இருக்கட்டும் அவளுக்கு எதுமே தெரியவில்லை. என்ன சொன்னாலும் கோபித்து கொண்டு மூஞ்சியை தூக்கி வச்சுகிறா என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறான். இதை கேட்ட பாக்கியா கண்டிப்பாக இருவருக்கும் எதாவது பிரச்சனை இருக்கு என தெரிவிக்கிறார்.
எழில் அமிர்தாவும் சந்தித்து சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். எழில் தனது பைக்கில் இருந்து டீ எடுத்து கொடுக்கிறார். அமிர்தா நடமாடும் டீ கடையா என கிண்டல் செய்கிறார். பின்னர் செல்வி ஜெனி இல்லாமல் வீடு நன்றாக இல்லை என பேசிக்கொண்டிருக்கின்றனர். செழியனுக்கும் ஜெனிக்கும் எதோ பிரச்சனை போல சீக்கிரமாக இந்த பிரச்சனையை சரி செய்யணும் என்று பாக்கியா நினைக்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!