ரோடில் நின்று சண்டை போடும் ராதிகாவின் கணவர், பாக்கியாவிற்கு காண்பிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவின் கணவர் வீட்டு வாசலில் நின்று சண்டை போடுகிறார். கோபி பாக்கியாவை அழைத்து சென்று காண்பித்து ராதிகாவிடம் பழக வேண்டாம் என எச்சரிக்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் எழில் அமிர்தாவை காதலிக்க போவதாக செழியன் சொல்கிறார். அப்படி எல்லாம் எதுவும் நடக்காது என எழில் சமாளித்து இருவரும் தூங்க செல்கின்றனர். ஜெனியின் அம்மா ஜெனி சரி இல்லை என ஜோசப்யிடம் சொல்கிறார். ஜெனி அப்போது அங்கே வர எதாவது பிரச்சனையா என்று கேட்கின்றனர். அதெல்லாம் ஒன்றும் இல்லையே நீங்க ஆன்டியிடம் வேணும்னா கேட்டு பாருங்கள் என்று சொல்லி சமாளிக்கிறார்.
ராதிகா வீட்டிற்கு செல்ல முடியாததை நினைத்து கோபி புலம்பி கொண்டே காரில் வருகிறார். அப்போது ராதிகாவின் கணவர் வீட்டு வாசலில் நின்று சத்தம் போட்டு கொண்டிருக்கிறார். கோபி அதை பார்த்து விட்டு பாக்கியவை அழைத்து வந்து காண்பிக்கிறார். பார்த்தாயா இந்த பொம்பளைய எப்படி ரோட்டில் நின்று சண்டை போடுகிறார்.
இதெல்லாம் அம்மா அப்பாவிற்கு தெரிந்தால் அவ்வளவு தான் இனிமேல் அந்த பொம்பளை கூட நீ பேசாத என்று சொல்லி மனதை மாற்றுகிறார். பாக்கியா வீட்டிற்கு வந்ததும் அதனை அம்மாவிடம் சொல்ல சொல்கிறார். செல்வி எங்க அக்கா போனீங்க சினிமாவிற்கா என்று கேட்க இல்லை, ராதிகா தெருவில் ஒரு பொம்பளை ரோடில் நின்று சண்டை போடுகிறார். அது ராதிகா வீட்டு பக்கம் தான் ராதிகா வீட்டில் இல்லை என்று சொல்லி சமாளிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!