ஜெனியை அவரது வீட்டில் விடும் செழியன், தனியாக தூங்க முடியாமல் தவிக்கிறார் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் ஜெனியை கொண்டு போய் விட்டுவிட்டு வருகிறார். கோபி சாதாரண விஷயத்திற்கு ராதிகா, பாக்கியலட்சுமி பழக கூடாது என எச்சரிக்கிறார். ஜெனியை பிரிந்து தூங்க முடியாமல் செழியன் தவிக்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன், ஜெனியை கொண்டு போய் அவரது அம்மா வீட்டில் விடுகிறார். ஜெனி வந்த சந்தோஷத்தில் அவரது அம்மாவும், அப்பாவும் மகிழ்ச்சி அடைகின்றனர். செழியன் வீட்டில் இறக்கி விட்டு ஜெனியிடம் எதுவும் பேசாமல் வருகிறார். பாக்கிய ஜெனி இல்லாததை மறந்து ஜெனியை கூப்பிடுகிறார். அப்போது ஈஸ்வரியும், செல்வியும் ஜெனி இல்லாததை நினைவுபடுத்துகின்றனர்.
ஜெனி, பாக்கியாவிற்கு போன் செய்து குட் நைட் சொல்லிவிட்டு தூங்க செல்கிறார். பின்னர் ராதிகாவும் மெசேஜ் செய்ய பதிலுக்கு பாக்கியவும் அனுப்புகிறார். அதனை பார்த்து கோபி பாக்கியாவிடம் பழக்கம் வழக்கம் எல்லாம் வீட்டிற்கு வெளியே வைத்துக் கொள்ளு, அம்மா அப்பாவிற்கு தெரிந்தால் கோவப்படுவார்கள் என்று கோபி கூறுகிறார்.
எழில் அமிர்தா குடும்பத்துடன் நெருக்கமாக பழகுவதை தப்பாக நினைக்க வேண்டாம் என கூறுகிறார். ஒரு பையனாக தான் நான் நடந்துக் கொள்கிறேன் அதை நீங்கள் தப்பாக நினைக்காதபடி நடந்துக் கொள்ள வேண்டும் என என் அம்மா கூறியுள்ளார் என்று தெரிவிக்கிறார். செழியன் ஜெனி இல்லாமல் தனியாக தூங்க முடியாமல் எழிலை துணைக்கு அழைக்கிறார். எழில் நீ ரூம் இல்லாமல் கஷ்டப்படுகிறாய் இங்கே தூங்கு என்று செழியன் சமாளிக்க, அட நல்லவனே உனக்கு தனியாக தூங்க பயம் என்று எழில் நக்கலடிக்கிறார்.
ஜெனியை பிரிந்து தூக்கம் வராமல் செழியன் கஷ்டப்படுகிறார். எழில் அதை பார்த்து கிண்டலடிக்கிறார். அப்போது சென்று ஜெனியை கூட்டிக்கொண்டு வா என தெரிவிக்கிறார். அவள் தான போனால் அவளே வரட்டும் என செழியன் கூறுகிறார். எழில் அமிர்தா பாட்டு பாடியதை நினைத்து சிரிக்க செழியன் என்ன என்று கேட்கிறார். அமிர்தாவை நினைத்து பார்த்தேன் என்று சொல்ல, இப்படியே போனால் நீ அமிர்தாவை காதலித்துவிடுவாய் போல என்று செழியன் சொல்லுகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!