கோபி ராதிகா திருமணத்தை நிறுத்த வாக்கு கொடுக்கும் ராமமூர்த்தி – “பாக்கியலட்சுமி” ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ராமமூர்த்தி இந்த திருமணத்தை நடத்தவிடமாட்டேன் என ஈஸ்வரியிடம் வாக்கு கொடுத்துவிட்டு கோபியை சந்திக்க செல்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. கோபி ராதிகாவை திருமணம் செய்ய இருக்கிறோம் என்ற சந்தோஷத்தில் இருக்க, சந்துரு திருமண ஏற்பாடுகளை பார்க்கிறார். கோபி ராதிகா திருமணத்தில் இனியாவும் ஈஸ்வரியும் வர வேண்டும் என கோபி ஆசைப்படுகிறார். அதனால் இனியாவிற்கு புது ட்ரெஸ் வாங்கி கொடுத்து ராதிகாவை திருமணம் செய்ய இருப்பதாக மறைமுகமாக சொல்கிறார்.
ஆனால் இனியா அது புரியாமல் இருக்கிறார். பின் ஈஸ்வரியை கோவிலில் சந்தித்து நான் ராதிகாவை திருமணம் செய்ய போகிறேன் என சொல்ல, ஆனால் ஈஸ்வரி இதெல்லாம் ரொம்ப தவறு நீ மறுபடியும் குடும்பத்துடன் சேர வேண்டும் என சொல்ல ஆனால் கோபி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் ஈஸ்வரி என்னை மீறி எப்படி திருமணம் செய்து கொள்கிறாய் என சவால் விடுகிறார். இது பற்றி ராமமூர்த்தியிடம் சொல்லி வருத்தப்படுகிறார்.
சீரியல் நடிகை ரச்சித்தா வாழ்வில் அடுத்து இப்படி ஒரு சோகமா? ஆதங்கத்தில் அவரே வெளியிட்ட பதிவு!
Exams Daily Mobile App Download
தற்போது வெளியான ப்ரோமோவில் ராமமூர்த்தி ஈஸ்வரியிடம் சொல்லிவிட்டு கோபியை கோவிலில் சந்திக்க செல்கிறார். மேலும் நான் இருக்கும் வரை இந்த திருமணம் நடக்காது நீ வருத்தப்படாதே என ஈஸ்வரியிடம் இந்த கல்யாணத்தை நடத்தவிடமாட்டேன் என சத்தியம் செய்து கொடுக்கிறார். கோபியை சந்தித்து பேச அவர் எனக்கும் பாக்கியாவிற்கும் முடிந்தது முடிந்தது தான் என சொல்ல, உடனே ராமமூர்த்தி நீ செய்வது ரொம்ப தவறு இந்த கல்யாணம் நடந்தால் யாருக்கும் நல்லது இல்லை. இனியாவை கொஞ்சம் நினைத்து பார் என சொல்ல, கோபி இப்படி எமோஷனல் பிளாக்மெயில் செய்ய வேண்டாம் யார் தடுக்க நினைத்தாலும் நானும் ராதிகாவும் கல்யாணம் செய்து கொள்வோம் என உறுதியாக சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்