TCS, HCL, Infosys நிறுவனங்களில் மீண்டும் அலுவலக வேலை முறை – ஊழியர்கள் கவனத்திற்கு!
பெரும்பாலான ஐடி நிறுவனங்களுக்கு வீட்டில் இருந்து ஊழியர்கள் வேலை பார்க்கும் முறை மிகவும் பிடித்த ஒன்றாக மாறி விட்டது. இந்நிலையில் பிரபல நிறுவன ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
வீட்டில் இருந்து வேலை:
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ் மற்றும் எச்சிஎல் மற்றும் பிற ஐடி நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடல் வேலைகளைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளதாக புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது பற்றி ஒவ்வொரு நிறுவனமும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்:
இந்தியாவின் ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 25/25 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பொருள் 2025 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் ஊழியர்களில் 25% மட்டுமே அலுவலக வளாகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும். மேலும் அந்த 25% ஊழியர்களும் தங்கள் வேலையில் 25% நேரத்தை மட்டுமே செலவிட வேண்டும்.
எச்.சி.எல்:
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி விஜயகுமார் நிறுவனத்தின் ஹைப்ரிட் ஒர்க் மாடல் உள்ளிட்டவற்றை பற்றியும் பேசியுள்ளார். இந்நிறுவனம் 22,000 புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் இதுவரை 15,000 பேரை பணியமர்த்தியுள்ளது.
இன்ஃபோசிஸ்:
இன்ஃபோசிஸ் நிறுவனம் ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளது. ஆரம்ப கட்டங்களில், வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே அலுவலகத்திற்கு நேரில் வருமாறு அதன் ஊழியர்களை ஊக்குவிக்கும். அதில் 40-50 சதவீத ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்பிய பிறகு அலுவலகத்திலிருந்து வேலை செய்வார்கள் என்றும் தெரிவிக்கிறது.