கோபி, ராதிகாவை பிரிக்க களமிறங்கிய அப்பா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

1
கோபி, ராதிகாவை பிரிக்க களமிறங்கிய அப்பா - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கோபி, ராதிகாவை பிரிக்க களமிறங்கிய அப்பா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

சில எதிர்பாராத திருப்பங்களுடன் வெளியாகி இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்துக்கான ப்ரோமோவில், கோபியின் ரகசியங்கள் எல்லாம் பாக்கியாவின் குடும்பத்தினருக்கு தெரிய வருமா என ரசிங்ர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்

பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு குடும்பத் தலைவியாக வீட்டுப் பொறுப்பை சிறப்பாக நிர்வகித்து வரும் ஒரு பெண்ணின் கதை தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் ஒன் லைன் கதைக்களம் ஆகும். இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மற்ற சீரியல்களை போல அல்லாது ஒரு குடும்பம் இப்படி தான் இருக்கும், இது போன்ற பிரச்சனைகள் உருவாகும், குடும்ப பொறுப்பை நிர்வகிக்கும் பெண்களுக்கு இப்படி தான் நடக்கும் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது.

Central Bank of India பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் – தேர்வு எழுத தேவையில்லை!!

இந்த வகையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக சின்னத்திரையில் பயணித்து வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. அதாவது எதற்கெடுத்தாலும் பாக்கியாவை மட்டம் தட்டி வரும் கணவர் கோபி, ஒருவருக்கும் தெரியாமல் தன் பாலிய கால சிநேகிதியுடன் ரகசியமாக பழகி வருகிறார். இதனை தனது குடும்பத்தாரிடம் இருந்து மறைக்க கோபி படும் அவஸ்தைகள் தான் கடந்த வார எபிசோடுகளில் அதிகம் இடம்பிடித்திருந்த கட்சிகளாகும். இப்போது, கோபி எப்போது பாக்கியாவின் குடும்பத்தினரிடம் மாட்டிக்கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

புது கண்ணம்மாவுடன் தொடங்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? ரோஷினி விலகியதன் உண்மை காரணம்!

அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்தில் கோபி, ராதிகா குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று அங்கு கடவுளை தரிசனம் செய்துவிட்டு ராதிகாவின் நெற்றியில் குங்குமம் வைத்து விடுகிறார். இந்த காட்சியை எதேர்ச்சியாக கோவிலுக்கு வரும் அவரது அப்பா பார்த்து விடுகிறார். இதற்கு பின்பு கோபி அப்பா எடுக்கும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது புதிய குழப்பமாக எழுந்துள்ளது. கோபியை இந்த இடத்தில் பார்க்கும் அவரது அப்பா நேரடியாக சென்று கோபியிடம் சண்டையிடலாம் என தெரிகிறது.

தமிழகத்தில் நவ.8 முதல் 1 – 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் கோரிக்கை!

அல்லது இந்த விஷயத்தை ஒருவேளை அவர் ரகசியமாக வைத்து வேறுவழியில் கோபியை சீர்படுத்தலாம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இதில் 2ஆவது விஷயம் நிகழ்வதற்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கோபி பற்றிய உண்மை தெரிந்தும் அதை யாரிடமும் சொல்லாமல் எழில் மறைத்து வருகிறார். ஒருவேளை கோபியின் அப்பா இதை பற்றி அவரது குடும்பத்தாரிடம் சொன்னால், அதை கேட்டு கோவமடையும் எழில், பாக்கியாவை கூட்டி கொண்டு அங்கிருந்து கிளம்பலாம் என சொல்லப்படுகிறது. என்றாலும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!