சமையல் செய்ய அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்கும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா அக்கம் பக்கத்தினரிடம் சமையல் ஆர்டர் குறித்து கேட்கிறார். சிலர் வரவில்லை என சொல்லி கிளம்ப, பாக்யவிற்காக சிலர் வர சம்மதம் தெரிவிக்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா நடைப்பயிற்சி செய்யும் போது அக்கம் பக்கத்தினரிடம் சமையல் ஆர்டர் பற்றி பேசுகிறார். ஆனால் நீ சமையல் ஆர்டர் செய்வதால் எங்களுக்கு என்ன கிடைக்க போகுது என கேட்கின்றனர். இல்ல எல்லாரும் சேர்ந்து செய்தால் நான் இந்த ஆர்டரை செய்து முடித்துவிடுவேன் என சொல்ல, எங்களால் வீட்டில் இருக்கும் வேலையே செய்ய முடியவில்லை நான் எப்படி இதெல்லாம் செய்வேன் என சொல்லி என்னால் முடியாது என கிளம்புகின்றனர்.
அதில் ஒருவர் மட்டும் நிற்க, என் மகள் நிச்சயத்திற்கு நான் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் போது நீ தான் எனக்கு உதவி செய்தாய் அதனால் நான் உனக்கு உதவி செய்கிறேன் என சொல்கிறார். வீட்டிற்கு வந்த பாக்கியா அமர்ந்திருக்க எழில் வந்து என்ன நடந்தது என கேட்கிறார். அப்போது 4 பேரிடம் பேசினேன், அதில் ஒருவர் தான் சம்மதம் தெரிவித்திருக்கார் என சொல்ல, அப்போது அமிர்தா போன் செய்கிறார். நானும் அம்மா உடன் இணைந்து சமைக்கிறேன் என சொல்ல, பாக்கியாவிடம் போனை கொடுக்கிறார்.
பாக்கியாவிடம் அமிர்தா நானும் வரேன் என சொல்ல, பாக்கியாவிற்கு நம்பிக்கை வருகிறது. உடனே அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவரையும் அழைத்து பாக்கியா பேசுகிறார். முதலில் பேச பாக்கியாவிடம் நாங்க எல்லாரும் வேலை செய்ய வேண்டுமா என கேட்க, பாக்கியா புரியும் படி பேசுகிறார். அதற்கு அமிர்தாவும் பேச பாட்டி குறுக்கிட்டு பாக்கியாவை கிண்டல் செய்கிறார். ஆளுக்கு ஒரு டிஷ் செய்தால் 1000 பேருக்கு சமைத்துவிடலாம் என சொல்கின்றார்.
கண்ணம்மாவை பாரதியிடம் இருந்து விவாகரத்து வாங்க சொல்லும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
உடனே எழில் கொஞ்ச நேரம் அமைதியாக இருங்க என சொல்ல, இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக செய்தால் 1000 பேருக்கு சமைத்துவிடலாம் என பாக்கியா சொல்லி, உங்க முடிவை சொல்லுங்கள் என சொல்கிறார். அதில் சிலர் முடியாது என சொல்லி கிளம்ப, பாக்கியா என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இதெல்லாம் சரியாக வராது என எனக்கு தெரியுமே என பாட்டி சொல்ல, திரும்பி சென்றவர்கள் மீண்டும் வருகின்றனர். ஒருவர் சரி என சொல்ல, பாக்கியாவிற்கு நம்பிக்கை வருகிறது. உடனே அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். பாக்கியா ராஜசேகர் அவர்களுக்கு சாப்பாடு கொண்டு சென்று கொடுக்கிறார். அப்போது அவர் பணம் எதாவது அட்வான்ஸ் வேண்டுமா என கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.