பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கும் எழில், ராதிகாவிற்கு பண உதவி செய்யும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கும் எழில், ராதிகாவிற்கு பண உதவி செய்யும் கோபி - இன்றைய
பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கும் எழில், ராதிகாவிற்கு பண உதவி செய்யும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கும் எழில், ராதிகாவிற்கு பண உதவி செய்யும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவின் பெரிய ஆர்டர் பற்றி பாட்டி அனைவரின் முன்னாடியும் சொல்கிறார். அப்போது கோபி எப்படி இவ்வளவு பெரிய ஆர்டர் செய்வ என கேட்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாட்டி பாக்கியா பெரிய ஆர்டர் வாங்கி உள்ளதாகவும், நிறைய வேலை ஆட்கள் பொருள்கள் இருப்பதாகவும் சொன்னதை சொல்லி கிண்டல் செய்கின்றனர். இவ்வளவு பெரிய ஆர்டர் சொன்னதும் சரி என்று சொல்ல எப்படி மனம் வந்தது என கோபி கேட்கிறார். அப்போது என்னால் சொல்ல முடியவில்லை என சொல்ல எழில் சப்போர்ட் செய்ய அவரை கோபி கோபத்துடன் பேசுகிறார். இது வீடு எல்லாரும் பேச தான் செய்வோம் என எழிலிடம் கோபி சொல்கிறார்.

பின் பாக்கியா சோகமாக இருக்க எழில் வந்து எதற்கு இந்த வீட்டில் இதை பற்றி சொல்ற என பாக்கியாவிடம் சொல்கிறார். இது தான வீடு என பாக்கியா சொல்ல, இவர்களிடம் சொன்னால் உன்னை அவர்கள் கிண்டல் செய்கிறார்கள். நீ இனிமேல் எதுனாலும் என்னிடம் சொல்லு என சொல்கிறார். உடனே பாக்கியா ஜோதிகா படத்தை பற்றி பேசுகிறார். நினைப்பது எல்லாம் நடப்பதும் இல்லை, நடக்காதுனு நினைக்கிறது எல்லாம் நடக்கும் என பாக்கியா சொல்கிறார்.

கடைசி வரை அம்மாவை பார்க்காத கண்ணன், அண்ணன்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

உடனே எழில், ஆமாம் நம்மளால் முடியாதது எதுவும் இல்லை என கர்ணன் படத்தை பற்றி பேசுகிறார். உன்னால் இந்த ஆர்டர் செய்ய முடியாவிட்டாலும் பிரச்சனை இல்லை ஆனால் ஒரு நாள் இது போல எல்லாமே செய்வ என ஆதரவாக பேசுகிறார். இந்த வீட்டில் நீ மட்டும் தான் எனக்கு ஆதரவாக இருக்க என பாக்கியா சொல்கிறார். பின் கோபி ராதிகா வீட்டிற்கு செல்கிறார். பின் ராதிகா கார் வாங்க நாளைக்கு வரீங்களா ராதிகா என சொல்ல, நான் வருகிறேன் பணம் கிடைத்துவிட்டதா என கோபி கேட்கிறார்.

வண்டி வாங்கும் போதே அவர்கள் லோன் வாங்கி தருவார்கள் என ராதிகா சொல்ல, கோபி ஏன் என்னிடம் பணம் கேட்க மாட்டேங்குற என சொல்கிறார். உங்க பணம் வேண்டாம் அது நன்றாக இருக்காது என சொல்ல, அதெல்லாம் முடியாது நான் தான் பணம் கொடுக்க போகிறேன் என சொல்லி பிடிவாதமாக இருக்கிறார். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்க மாட்டேங்குறீங்க என ராதிகா சொல்ல, உன்னிடம் பணம் இருந்தால் நான் கொடுக்கமாட்டேன். ஆனால் பணம் இல்லாதனால நான் தான் பணம் கொடுப்பேன் என சொல்கிறார்.

கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ நினைக்கும் பாரதி, பதட்டத்தில் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

பின் பாக்கியா கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்க, பாக்கியாவிற்கு மயூரா மெசேஜ் அனுப்புகிறார். மயூ ஸ்கூலிற்கு போகலையா என கேட்க, அவங்க புது கார் வாங்க போறேன் என்று சொல்கிறார். அவங்க சம்பாரிக்கிறார் எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்குவார், ஆனால் இங்கே எல்லாம் கோபி தான் பாக்கிறார் என சொல்கிறார். நீயும் வேலை பார்க்கிறேன் என சொல்ற ஆனால் எதுவும் இந்த வீட்டிற்கு பண்ணதில்லை என ஈஸ்வரி பாக்கியாவை குறை சொல்கிறார்.

உங்களுக்கு தெரியும் அத்தை வீட்டில் அவர் தரும் பணம் போதவில்லை, காய்கறி எல்லாம் நானே தான் சென்று வாங்குகிறேன் என சொல்கிறார். நீயும் ராதிகாவும் ஒண்ணா என ஈஸ்வரி கேட்க, கோபிக்கு ராதிகா போல படித்த பெண் கிடைத்திருந்தால் நல்ல வீடு வாங்கியிருக்கலாம், கார் வாங்கியிருக்கலாம் என சொல்கிறார். அதான் படித்த பெண்ணை படித்த மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என சொல்கிறார். நானும் தான் தினமும் சம்பாரிக்கிறேன் ஆனால் என்னால் என்ன வாங்க முடிந்தது என சொல்ல, கோபி தான் கசப்படுகிறான் என சொல்லி ஈஸ்வரி கவலைப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!