செழியன் மனதை மாற்றும் ஜெனி, அமிர்தா வீட்டிற்கு செல்லும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
செழியன் மனதை மாற்றும் ஜெனி, அமிர்தா வீட்டிற்கு செல்லும் பாக்கியா - இன்றைய
செழியன் மனதை மாற்றும் ஜெனி, அமிர்தா வீட்டிற்கு செல்லும் பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
செழியன் மனதை மாற்றும் ஜெனி, அமிர்தா வீட்டிற்கு செல்லும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், குழந்தை பெற்று கொள்வது பற்றி செழியன் மனதை மாற்றுகிறார் ஜெனி. பின் அமிர்தா வீட்டிற்கு பாக்கியா செல்கிறார். பாக்கியாவை பார்த்த மகிழ்ச்சியில் அமிர்தா குடும்பத்தினர் இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், சாப்பாடு கொடுக்கும் இடத்தில் பாராட்டியதை நினைத்து செல்வியும் பாக்கியாவும் சந்தோசப்படுகின்றனர். அப்போது செல்வி நானும் உங்க வீட்டில் எத்தனை வருசமாக வேலை செய்கிறேன் ஆனால் நீ பாராட்டியதே இல்லை என செல்வி சொல்கிறார். ஜெனி வாந்தி எடுக்க ஈஸ்வரி அம்மா சென்று பார்க்கிறார். ஜெனியை கூட்டிக் கொண்டு வந்து ஹாலில் உக்கார வைத்து தண்ணீர் கொடுக்கிறார். இப்படி தான் இன்னும் 2 மாதங்களுக்கு இருக்கும் அப்பறம் எல்லாம் சரியாக போய்விடும் என பாட்டி சொல்கிறார்.

வாந்தி வருகிறது என்று சாப்பிடாமல் இருக்காதே என தாத்தா சொல்கிறார். பின்னர் எப்படி சாப்பிட வேண்டும் என பாட்டி சொல்லி தருகிறார். பின் ஜெனி செழியனிடம் சென்று நான் வாந்தி எடுத்து முடியாமல் இருக்கிறது. ஆனால் பாட்டி என் மீது இப்போது தான் பாசமாக இருக்கிறார். பாட்டி எவ்வளவு நேரம் என்னுடன் நன்றாக பேசினார் தெரியுமா, நாம குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் பாட்டி மீண்டும் என் மீது கோவப்பட்டு பேசாமல் இருந்திருவாங்க.

லட்சுமி அம்மாவிற்கு இறுதி சடங்கு நடத்தும் குடும்பத்தினர், எதுவும் தெரியாமல் இருக்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

வீட்டில் இருக்கும் அனைவரும் எவ்வளவு ஆசையாக இருக்கிறார்கள். அதனால் கட்டாயம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என சொல்லி ஜெனி செழியனின் மனதை மாற்றுகிறார். பாக்கியா ஜெனிக்கு ஜூஸ் கொடுக்க,பாட்டி இப்போது தான் நன்றாக கவனிக்கிறார்கள். நீ குழந்தை பெற்றுக் கொள்ள இருக்கிறாய் அதுனால தான் உன் பாட்டி இவ்வளவு பாசமாக இருக்காங்க என செல்வி சொல்லி கிண்டல் செய்கிறார். பின் பாட்டி செழியன் என்ன சொல்கிறான் என கேட்க, அவன் இப்போ குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி கவலைப்படுகிறன் என சொல்கிறார் ஜெனி.

கோபிக்கும் சின்ன வயதில் தான் குழந்தை பிறந்தது அதுனால தான் அவன் நல்ல இளமையாக இருக்கான். அதுபோல தான் செழியனும் இருப்பான். அப்போது எழில் அங்கே வருகிறார். எனக்கு பசியே எடுக்கல என செழியன் சொல்ல, பாக்கியா சாப்பாடு கட்ட பாக்ஸ் இல்லை என சொல்கிறார். எங்கே கிடைக்கும் என சொல்லு நான் சென்று வாங்கி வருகிறேன் என பாக்கியா சொல்ல, செழியனும் பாக்கியாவும் கிளம்புகின்றனர்.

லட்சுமிக்கு உணவு சமைத்து தரும் சௌந்தர்யா, கண்ணம்மாவை ஏமாற்றும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அப்போது ரோட்டில் அமிர்தாவின் அப்பா வர, பாக்கியாவை எழில் அறிமுகப்படுத்துகிறார். எழில் உங்களை பற்றி தான் அடிக்கடி சொல்வான் என அமிர்தாவின் அப்பா சொல்ல, ஆமாம் இவன் எங்கே சென்றாலும் என்னை பற்றி தான் பேசுவான் என பாக்கியா சொல்கிறார். நீங்க செஞ்ச இனிப்புகளை நான் சாப்பிட்டேன் நன்றாக இருந்தது என சொல்லி அமிர்தாவின் அப்பா வீட்டிற்கு அழைக்கிறார். இன்னொரு நாள் வருகிறேன் என சொல்ல, பாக்கியாவை வீட்டிற்கு வர சொல்கிறார்.

எழில் பக்கத்தில் தான் வீடு இருக்கிறது என சொல்ல, அமிர்தாவும் அவர் அம்மாவும் வீட்டில் தான் இருக்கிறார்கள் நீங்க வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்கள் என அப்பா சொல்கிறார். பின் வீட்டிற்கு வந்ததும் அனைவரும் பாக்கியாவை பார்த்து சந்தோசப்படுகின்றனர். பாக்கியாவும் அவர்களை பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!